மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியல் செய்யும்போது அதிகம் பொறுமை இருக்க வேண்டும். அப்போதுதான் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகிறது. ஆட்சி அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரம் ஏற்பட்டு, நாடு வீழ்ச்சியடையும்போது ஆட்சியை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலே நான் முன்வந்தேன். ஏனெனில் யாரும் முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை.

அதனால் எவ்வாறாவது நாட்டை கட்டியெழுப்புவோம் என நினைத்தே நாட்டை பொறுப்பேற்றேன். இவ்வாறான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.

அதேநேரம் ஜேஆர் ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார். நாட்டை முன்னேற்றுவதற்கு ஆரம்பமாக அனைவருக்கும் கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

அன்று ஜேஆர் பாதுகாத்துவந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க முற்படுமாக இருந்தால், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அன்று ஏகாதிபத்திய வாதத்துக்கு எதிராக ஜேஆர் நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்தார். சத்தியாக்கிரக போராட்டங்களை மேற்கொண்டார். அதனால் அவ்வாறானதொரு நிலை தற்போது இடம்பெறுவதாக இருந்தால், நாங்கள எலலோரும் ஒன்றிணையவேண்டும்.

அத்துடன் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போகும். அவ்வாறான நிலைமை மீண்டும் எற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் பாராளுமன்றத்தில் இல்லை என்றார்.

WhatsApp Image 2026-09-19 at 9.31.30 PM

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்!

September 19, 2026

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை இணைக்கும் 4

WhatsApp Image 2026-09-19 at 9.26.30 PM

மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்

September 19, 2026

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Image 2026-09-19 at 9.22.21 PM

போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்

September 19, 2026

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு

WhatsApp Image 2026-09-19 at 9.18.14 PM

தேசிய கொள்கைக் கட்டமைப்பு UNP கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரணில்

September 19, 2026

இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்மொழியப்பட்ட தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட அரசியல்

thiru

யாழ். திருவள்ளுவர் கலாசார மன்ற நிர்வாகம்; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு!

September 19, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு

ff

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் ஆரம்பம்!

September 19, 2026

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர்

phototune.ai_1789816904

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

September 19, 2026

வடமாகாண சுகாதார, சுதேச வைத்திய மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 184,730,000.00 ரூபா செலவில்

rai

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

September 19, 2026

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்

vima

நீதிமன்ற அவமதிப்பு; வீரவன்சவின் பேச்சு குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி-க்கு உத்தரவு

September 19, 2026

ன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு நீதிமன்ற அவமதிப்பாக

veerapandian

மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிப்பு ரத்து: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சிபிஐ வரவேற்பு!

September 19, 2026

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில், சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும்

dailythanthi_2026-09-17_cz5vajzl_bharadi-dasan

மலேசியாவில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ. 23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு – சமூக நீதித்துறை தகவல்!

September 19, 2026

சென்னை: மலேசியாவில் மூளை திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் (Tissue Engineering and Regeneration) பிரிவில் முனைவர் பட்ட (Ph.D.)

Screenshot 2026-09-19 170236

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி: சமயபுரத்தில் 5-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்!

September 19, 2026

திருச்சி: கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 3,000-க்கும்