கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் பலரை ஏமாற்றி அபார்ட்மென்ட் வாடகை மோசடியில் (Rental fraud scheme) ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸாரின் நிதிப் மோசடிப் பிரிவினர் (Fraud Bureau) தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், சந்தேக நபர்கள் சமூக வலைத்தளங்களில் அபார்ட்மென்ட் வாடகை விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். அவ்விளம்பரத்தைப் பார்த்து வந்த பாதிக்கப்பட்ட நபர்களிடம், தாங்களே தற்போதைய வாடகைதாரர்கள் எனப் பொய் கூறி, இணையவழியில் (Online) வாடகை ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர்.
மோசடியின் விவரங்கள்:
-
நிதி இழப்பு: வாடகை வீட்டை உறுதிசெய்வதற்காகப் பாதிக்கப்பட்டவர்கள் ‘ஈ-டிரான்ஸ்ஃபர்’ (E-transfer) மூலம் பணம் அனுப்பியுள்ளனர். பின்னர் குடியேறச் சென்றபோது, அந்த வீடு வாடகைக்குக் கிடைக்கவில்லை என்பதும், உரிமையாளராக நடித்த நபர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் தெரியவந்தது.
-
பாதிக்கப்பட்டோர்: இதுவரை குறைந்தது 8 பேர் இம்மாஃபியா கும்பலிடம் ஏமாந்துள்ளதாகவும், அவர்களின் மொத்த நிதி இழப்பு $30,000 டாலர்களுக்கும் அதிகம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட எவருக்கும் பணமோ அல்லது வீடோ திரும்பக் கிடைக்கவில்லை.
தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள்: இச்சம்பவம் தொடர்பில் பின்வரும் இருவருக்கு எதிராகப் பொலிஸார் கைது பிடியாணை (Warrant) பிறப்பித்துள்ளனர்:
-
ஜஷன்பரீத் சித்து (Jashanpreet Sidhu – 23): $5,000 டாலருக்கு மேற்பட்ட நிதி மோசடி மற்றும் குற்றச் செயல் மூலம் பெற்ற சொத்தை வைத்திருத்தல்.
-
பிரியான்ஷு கோயல் (Priyanshu Goel – 24): $5,000 டாலருக்கு மேற்பட்ட நிதி மோசடி.
இணையவழியில் வாடகை வீடுகளைத் தேடும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உரிமையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்க்காமல் முன்பணங்களை அனுப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.