ஈரோடு:
காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது; அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை எனத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காவிரித் தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது எனத் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்துத் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லை. அண்டை மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை உதாரணமாகக் காட்டி எங்களிடத்தில் கேள்வி கேட்பதைக் காட்டிலும், எல்லோரும் ஒருங்கிணைந்து டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது” என்று கூறினார்.
மேலும், “அந்தக் கனவு நிறைவேறும் காலம் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது. நல்லதொரு முதலமைச்சர் நமக்குக் கிடைத்துள்ளார். அந்தக் காலம் பொற்காலமாக அமையும். முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது; அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வேளாண்மைக்கெனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதில் விவசாயிகளின் நலன்களுக்கான அனைத்துச் சிறப்புத் திட்டங்களும் இடம்பெறும் என்றும் உறுதிபடக் கூறினார்.
#Sengottaiyan #CMVijay #CauveryIssue #TVKGovt #MinisterSengottaiyan #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #Ragupathy #PoliticalUpdate #TamilNewsLive