கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து  ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஈழ வரலாற்றிலும் உலக மனித உரிமைப் பரப்பிலும் “செம்மணி” என்ற சொல் வெறும் ஒரு நிலப்பரப்பைக் குறிப்பது அல்ல மாறாக, அது ஆறாத காயத்தின், பேரழிவின், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாக உள்ளது.

1995-1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் சித்திரவதைகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1998 இல் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியத்தினைத் தொடர்ந்து செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நீண்ட தசாப்தகால மௌனத்திற்குப் பிறகு, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் அகழ்வாராய்ச்சிகளில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என சகல வயதுத் தரப்பினரதும் நூற்றுக் கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இது, தங்கள் உறவுகளைத் தேடிப் போராடும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆறாத துயரத்தையும் அதிர்ச்சியையும் மீண்டும் மீண்டும் அளித்துக்கொண்டிருக்கின்றது.

எமது மண்ணில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால வடுக்கள், நில அபகரிப்புகள் மற்றும் நீதியின்மைகள்… தொடரும் சூழலில் ‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு. உரிமைக்குரல் கொடுக்க நாற் திசைகளிலுமிருந்து ஒன்று திரண்டு ‘விழித்தெழு தமிழா’ நிகழ்வுக்கு வலுச் சேர்ப்போம்!

mahara in

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை; கைதிகள் பலர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல

crime

நோர்த் யார்க்கில் (North York) இரவில் நடந்த கத்திக்குத்து: தீவிர காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி

August 1, 2026

சனிக்கிழமை அதிகாலை நோர்த் யார்க்கில் (North York) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

AWUN5RGOHZEHZG4Y54UHWA4OKA

மிசிசாக்காவில் (Mississauga) நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயம்; தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

August 1, 2026

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2026) அதிகாலை மிசிசாக்காவில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய

2

மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி? – கேள்வியெழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரியாகக் கேள்வி

1

ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி: 160 பிலிம் ரோல்களை அதிரடியாக திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!

August 1, 2026

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன நெடி வீசியதையடுத்து, 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை

nilakshan

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

August 1, 2026

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். ஊடக

752391120_122112474525381022_3499782480351502009_n

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 1, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

court-judge-hammer-gavel-696x398

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு முழுமையாகத் தள்ளுபடி – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 1, 2026

யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால்

Uthaya

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

August 1, 2026

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

acci main

புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

August 1, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார்

tr

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

August 1, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான

bl

’பாரமிதா’ இரத்ததான முகாம்

August 1, 2026

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று