கடந்த மாதம் பெர்லிங்டன் பகுதியில் பெண் ஒருவர் இருமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, உபர் (Uber) ஓட்டுநர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 16-ஆம் திகதி மாலை 5:15 மணியளவில், பெர்லிங்டன் GO ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (Burlington GO station parking lot) அப்பெண் இருந்தபோது, ஓட்டுநர் ஒருவர் அவரை அணுகியதாக ஹால்ட்டன் பொலிஸார் (Halton police) தெரிவித்தனர்.
அவர்களுக்கிடையேயான உரையாடலின் போது, அந்த ஓட்டுநர் அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து சென்றபோதிலும், அந்த ஓட்டுநர் அவரைப் பின்தொடர்ந்து அருகிலிருந்த ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று, அங்கு இரண்டாவது முறையாகவும் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் எட்டோபிகோக்கைச் (Etobicoke) சேர்ந்த 25 வயதான மன்தீப் சிங் (Mandeep Singh) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் அவர் உபர் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் இருக்கலாம் என விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் இருப்பதால், மன்தீப் சிங்கின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.