சி.டி விக்ரமரத்ன மரணத்தில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் ; தேசிய பாதுகாப்புத் பிரச்சினை உள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புத் பிரச்சினை எழுந்துள்ளமை தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார்

கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள், நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றினார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு அப்பாற்பட்ட, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான ஒரு அதிகாரியாகவே அவரை நான் பார்த்தேன்.

அவர் யாருக்கும் சார்பாகச் செயல்படவில்லை என்பதுடன், அரசியல்வாதிகளுக்குத் தேவையான முறையில் தீர்மானங்களை எடுத்த ஒரு அதிகாரியும் அல்ல. அவரைப் போன்ற மிகவும் திறமையான மற்றும் நேர்மையான ஒரு அதிகாரிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது எமக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.

இன்று இந்நாட்டின் சில முக்கிய வழக்குகளில், தீர்மானமிக்க சாட்சியாக இருந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். நமது நாட்டின் பொலிஸ் வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ்மா அதிபரோ அல்லது இராணுவ அதிகாரிகளோ தற்கொலை செய்துகொண்ட வரலாறு இல்லை. ஆனால், இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.

எனவே, அரசாங்கம் இந்த விசாரணை குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு முன்னரும் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் எனச் சிலர் இந்த முறையில் தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் சிலர் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இது அரசாங்கத்தின் தவறான ஆட்சி முறையின் காரணமா என்று தெரியவில்லை. ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் இந்நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.

இந்நாட்டில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரச்சினை உள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு கூற்றை விடுத்து, எனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறான பொலிஸ் பாதுகாப்பை நான் கோரவும் இல்லை, எனக்கு வழங்கப்படவும் இல்லை. இவ்வாறான பொய்க் கூற்றுக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

அமைச்சர் எதையோ ஒரு தாளில் எழுதிவந்து வாசிக்கின்றார். அது ஒரு அறிக்கையா அல்லது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. ஆனால், இன்று பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்பது பாதுகாப்புத் தொடர்பில் எழுந்துள்ள பாரதூரமான பிரச்சினையாகும் என்றார்.

WhatsApp Image 2026-09-14 at 07.00.38

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

September 14, 2026

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை

MediaFile_20260913_220352_145

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

September 14, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

cas

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

September 14, 2026

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின்

ac

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

September 14, 2026

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே

ar 2

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

September 14, 2026

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

arr

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

September 14, 2026

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்

u

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

September 14, 2026

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய

Gnansa

ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை

September 14, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து