நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்-வடக்கு மாகாண  ஆளுநர் 

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:
இன்றைய தினம் புதிதாக நியமனம் பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ளவர்களில் பதவியுயர்வு பெறுபவர்கள் என இரண்டு தரப்பினர் இங்குள்ளீர்கள். கடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது செயலாளர்களாகவும், ஆணையாளர்களாகவும் இங்கு வீற்றிருக்கிறார்கள். அன்றைய காலங்களில் அவர்கள் பணியாற்றிய போது பல்வேறு அரசியல் தலையீடுகளும் அழுத்தங்களும் இருந்தன. ஆனால், இன்று அவ்வாறான நிலைமை இல்லை. நீங்கள் மிகவும் சுதந்திரமாகப் பணியாற்றலாம்; ஆனால், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.
நீங்கள் நேர்மையாகப் பணியாற்றினால் நிச்சயமாக உங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவார்கள். உங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும். பல்வேறு சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் உங்களிடமிருந்து விரைவான, நட்பான, மற்றும் தரமான சேவையையே எதிர்பார்க்கின்றார்கள். எனவே, நீங்கள் நேரிய சிந்தனையுடன் விடயங்களை அணுக வேண்டும். உங்களை நாடி வருகின்ற ஒரு பொதுமகனுக்கு எவ்வாறு சேவையைச் செய்து கொடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, அவரை எப்படித் தட்டிக் கழிக்கலாம் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பதவிக் கதிரையில் அமர்ந்ததும் சிலர் மறந்து விடுகின்றார்கள்; அந்த நிலைமை மாற வேண்டும்.
முன்னைய காலங்களில் அரச நியமனக் கடிதங்களில் ‘இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது ‘வடக்கு மாகாணத்தில் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்’ என நியமனக் கடிதங்களில் நிபந்தனை வழங்கப்படுகின்றது. ஆனால், இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அதனை ஏற்க மறுக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. இது அரச சேவைக்குப் பொருத்தமற்றதொரு விடயமாகும்.
நீங்கள் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் பணியாற்றுங்கள். அந்தத் தலைமைத்துவப் பண்பு உங்களிடம் இருக்குமாக இருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடங்களிலிருந்து உங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே எமக்கு வராது. மக்கள் விரும்புகின்ற சிறந்த சேவையை நீங்கள் அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்,’ என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் புதிய நியமனதாரர்களுக்கான வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கினர்.
முகாமைத்துவ சேவை அதிசிறப்புத் தரம்: 26 பேர் (இவர்களில் 11 பேர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகவும், 15 பேர் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்). வருமான வரிப் பரிசோதகர்கள்: 14 பேர். நூலகர்கள்: 02 பேர்.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், அமைச்சின் உதவிச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
chemmani 16

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

2

நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு – நடிகர் தனுஷ்!

July 28, 2026

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி