சமூக நீரியல்துறை பேராசிரியர், வஸ்பர் குழுவுடன் இணைந்த நயினாதீவு நீர்வள ஆய்வுப் பயணம் – உரையாடலில் ஆதக்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் ..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் WASPAR ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது.
பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் வஸ்பர் குழுவைச் சேர்ந்த ஆறு ஆய்வு மாணவர்களோடு மேற்படி பயணத்தில் மக்களுக்கும் நீருக்கும் இடையிலான ஊடாட்டத்தை பரந்த பார்வையில் பார்க்கின்ற சமூக நீரியல் என்கிற அறிவியல் கோட்பாட்டின் மூலகர்த்தாவான பேராசிரியர் முருகேசு சிவபாலன் அவர்களுடன் சென்று நயினாதீவின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடலில் ஈடுபட்டனர்.
காலையில் நயினாதீவு மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தோடும், மதியம் தென்பகுதி மலையடி மீனவர் சங்கத்தினருடனான உரையாடலோடும், மாலை முதலாம் வட்டார வல்லிக்காடு மீனவர் சமூகத்தினருடன் மக்களை ஈடுபடுத்திய உரையாடலோடும் பல்வேறு நீர்சார்ந்த அனுபவ பகிர்வுகளை பெற்றுக் கொண்டனர்.
வல்லிக்காடு, காளி கோவிலடி, காட்டுக் கந்தசாமி கோவிலடி, தீர்த்தக்கரை பக்கமுள்ள பெருங்கிணறுகளின் நீரின் உவர்தன்மை, நீரின் இயல்பு குறித்த தரங்களையும் ஆய்வு செய்ததோடு, அங்குள்ள மக்களோடும் கலந்துரையாடினர்.
கடல் நீர் நன்னீராக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நீரின் தொடர்ச்சியான வழங்கலில் ஏற்பட்டுள்ள தடையினால் ஏமாற்றமடைந்திருந்த மக்கள், பழுதடைந்திருந்த இயந்திரத்தின் திருத்தத்தின் பின்னர் நீர் வரத் தொடங்கியிருந்தாலும் போதிய அளவு நீர் வரவில்லை என்கிற ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்திருந்தனர்.
சில பகுதிகளில் நெடுங்காலமாக நன்னீர் பெற்று வந்த கிணறுகள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம், உவர்நீராகும் ஆபத்து போன்ற நம்பிக்கையீனங்களை மக்கள் வெளியிட்டிருந்தார்கள்.
நீரின் நெருக்கடியை புரிந்தவர்களாக குழாயில் நீர் வருவதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டு இருக்கின்ற நீர் வளங்களை கைவிடுகின்ற நிலைக்கு ஒரு நாளும் போகமுடியாது என்கின்ற பாரம்பரியமாக தொடர்ந்து வருகின்ற உண்மையை அவர்களுக்கு மீள வலியுறுத்தி, அதற்கு உகந்தவகையில் பழைய நீர்மூலங்களை அதே நிலையில் பேணுவதற்கான அவர்களுடைய பொறுப்பையும் ஈடுபாட்டையும் வலுவாக தொடர்வதற்கு துணை நிற்போம் என்பதையும் குழுவினர் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
அதனை விட குளங்களின் தூர்வாரலுக்காக அரசு ஒதுக்கியிருக்கின்ற புதிய நிதியின் வருகையின் போது பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான குளத்தை ஆழப்படுத்துகின்ற செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் என்பதையும், களிமண்ணை அடித்தளமாக கொண்ட சிறிய குளங்கள் ஒரு போதும் இயந்திரங்களை இறக்கி செயற்படக் கூடாது. அவ்வாறு இழந்த குளங்களின் கதைகள் எம்மிடையே இருக்கின்றன என்பதனையும் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், கமக்காரர் அமைப்புகள் கூட்டாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கியிருந்தனர்.
மக்களிடமிருந்து உரையாடல்களின் போது பெற்றுக் கொண்டுள்ள தகவல்களையும் தொகுத்து ஆய்வு செய்து நயினாதீவின் நீர்வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை தொடர்வதிலும் வஸ்பர் குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்