சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு, தவெக அரசு மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை உள்ளிட்ட பல கிராமங்களில் மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, கதிரியக்கப் பாதிப்பையும் ஏற்படுத்தும். கடந்த மாதம் குவாரிகளை ஆய்வு செய்து இயற்கை வளப் பாதுகாவலர் என்று பெயரெடுத்த அமைச்சர் டி.கே. பிரபு, தற்போது மௌனம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் கனிமக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படக் கூடாது என்று எச்சரித்துள்ள சீமான், உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மாபெரும் எதிர்ப்பினைப் பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Seeman #NTK #Kanyakumari #IREL #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #AtomicMining #Politics2026 #EnvironmentalConcern #TamilNaduPolitics #Protest #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash