திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பிலுள்ள அமெரிக்கன் சிலோன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம், மட்டக்களப்பு கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களின் ஒன்றியத் தலைவரும் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மாவட்ட செயற்பாட்டாளருமான ச.சிவயோகநாதனின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை பிரகடனத்தின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர் அருட்பணி லூக்ஜோன் சிவில் சமூக பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ப் பொது வேட்பாளருமாகிய பா.அரியநேந்திரன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், திருக்கோணமலை பிரகடனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், மக்களிடையே அதன் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நடவடிக்கைகள், மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இறுதியாக, திருக்கோணமலை பிரகடனத்தின் இலக்குகளை அடைவதற்காக மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

drowning

குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

June 29, 2026

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக

Srinesan

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது! ; நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Dollar-Rupee

8 சதவீதம் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

June 29, 2026

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

arr

ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது

June 29, 2026

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர்

the

மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

June 29, 2026

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின்

3

விஜய் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி? ஜூலை 1-இல் ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு

June 29, 2026

‘சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக-வின் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. ஆதரவு கட்சிகளுடன் ஜூலை

Nalin

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

June 29, 2026

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று

tr

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

June 29, 2026

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்

tax

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

June 29, 2026

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

ba

மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

June 29, 2026

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை

2

திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி

June 29, 2026

‘சென்னை: தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில்

734218616_27816039184657851_6230302619454015478_n

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

June 29, 2026

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக