காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி.மாதுசனா திஷான் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகள் விடுவிக்கப்படவே வேண்டும் என வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது பூர்வீகக் காணி விடுவிப்பிற்காய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்காக எப்போதும் துணைநிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
,
கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பகாலத்தில் பிலக்குடியிருப்புக் காணி விடுவிப்பிற்காக 30நாட்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி அந்த மக்களுடைய பிலக்குடியிருப்புப்பகுதியிலிருந்த பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்பு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கேப்பாப்பிலவுப் பகுதியிலுள்ள தமது பூர்வீக வாழ்விடக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அந்துமக்களுக்குரிய ஒருபகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கேப்பாப்பிலவு பகுதியைச்சேர்ந்த 55குடும்பங்களுடைய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், 04குடும்பங்களுடைய 100ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளும் விடுவிக்கவேண்டியுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படாமலுள்ள தமது பூர்வீகக் காணிகளைவிடுவிக்குமாறு வலியுறுத்தியே, தற்போது மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்த மக்கள் தங்களுடைய பூர்விகக் காணிகள் தங்களுக்கு வேண்டும் என்றுதான் அந்தமக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். வேறு இடங்களில் காணிகள் எனுஅந்தமக்கள் போராடவில்லை.
எனவே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் இந்தப் பூர்வீக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.
கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றேன். குறிப்பாக பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சினுடைய அமைச்சுசார் ஆலோஙனைக்குழுக்கூட்டங்களில் இந்த கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக பலதடவைகள் வலியுறுத்தியிருக்கின்றேன்.
அந்தவகையில் ஜனதிபதியும் இந்துமக்களின் காணி விடுவிப்பு விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும். கவனஞ்செலுத்துவார் என்றே நம்புகின்றோம்.
அந்த மக்களின் காணி இந்தமக்களுக்கே விடுவிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பிற்காக, எப்போதும் அந்த மக்களுடன் துணைநிற்பேன்
May be an image of text that says 'கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்! காணி விடுவிப்பிற்காய் போராடும் மக்களோடு எப்போதும் துணைநிற்பேன் ரவிகரன் எம்.பி தெரிவிப்பு 55 குடும்பங்களுடைய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் 生社 04 குடும்பங்களுடைய 100 ஏக்கர் மத்தியவகுப்பு காணிகள் மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் டவேண்டும் துரைராசா ரவிகரன் பாராளுமன்ற உறுப்பினர் 0770657751 ravikaranmpoffice@gmail.com'
Nalin

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

June 29, 2026

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று

tr

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

June 29, 2026

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்

tax

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

June 29, 2026

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

ba

மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

June 29, 2026

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை

2

திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி

June 29, 2026

‘சென்னை: தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில்

734218616_27816039184657851_6230302619454015478_n

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

June 29, 2026

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக

1

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

June 29, 2026

‘சென்னை: கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை

dead'

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

June 29, 2026

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது

sa

சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

June 29, 2026

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

bens

பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

June 29, 2026

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான

Ananda-Wijepala (1)

எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

June 29, 2026

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன.

vijitha pa

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

June 29, 2026

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து