யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களப் பாடத்திற்கு சிறப்பு (C) சித்தியை யோஷித ராஜபக்ச பெற்றிருக்கவில்லை.

மேலும் அவரது கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய ஆவணங்கள் அவரது தனிப்பட்ட கோப்பிலிருந்து (Personal File) திட்டமிட்ட முறையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட கடற்படை விசாரணை குழுவின் தலைவர்: ரியர் அட்மிரல் DWB வெத்தேவ உறுப்பினர்கள்: கொமடோர் USR பெரேரா மற்றும் கொமடோர் MMVB மெதகொட ஆகியோர் கண்டுபிடித்தவை,

அதேபோன்று அக்காலப்பகுதியில் திருகோணமலை கடற்படை அகடமியில் (Naval Academy) பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் யோஷிதவின் குழு உறுப்பினர்கள் (Batchmates) வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கையிலே மேற்குறிப்பிட்ட தகவல்கள் உள்ளக்கப்பட்டிருந்தன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது ஒரு நிறைவேற்று அதிகாரியாக Executive Officer) தகுதி பெறுவதற்கு டோரா (Dvora) ரக தாக்குதல் படகுகள் அல்லது பிற கடற்படை கப்பல்களில் கடல் பயிற்சி பெறுவது கட்டாயமாகும்.

எனினும் யோஷிதவின் விடயத்தில் இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டிருந்தன. யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த அக்காலப்பகுதியில் யோஷித ஒரேயொரு முறை மாத்திரமே கடல் பயிற்சிக்காகச் சென்றிருந்தார்.

யோஷிதவை எவ்வித ஆபத்தான கடல் பயிற்சிகளிலோ அல்லது கடமைகளிலோ ஈடுபடுத்த வேண்டாம் என அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் பயிற்றுவிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஒரு கடற்படை அதிகாரிக்கு அத்தியாவசியமான பாடங்களான வரைபடம் வாசித்தல் (Map Reading) மற்றும் ராடார் கண்காணிப்பு (Radar Monitoring) போன்ற முக்கியமான நடைமுறைப் பயிற்சிகளை அவர் பூர்த்தி செய்திருக்கவில்லை.

எழுத்துப் பரீட்சைகளில் யோஷிதவை சித்தியடையச் செய்வதற்காக அப்போதிருந்த பரீட்சகர்களுக்கு உயர் மட்டத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவிலும் இரண்டு வருட கடற்படை மாணவர் (Cadet) பயிற்சிக் காலத்தின் போது அனைவரும் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முகாம்களில் தங்கியிருக்க வேண்டும்.

வீட்டிற்குச் செல்வதற்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும். ஆனால் யோஷித ராஜபக்ச பயிற்சிக் காலத்தின் பெரும்பகுதியை கொழும்பிலுள்ள தனது வீட்டிலேயே கழித்தார்.

முகாமில் இருந்த சந்தர்ப்பங்களில் கூட அவர் ஏனைய மாணவர்களுடன் இணைந்து வாழவோ அல்லது அதிகாரிகளின் உணவு விடுதிக்கு (Officers’ Mess) செல்லவோ இல்லை. அவருக்காகவே ஒதுக்கப்பட்ட விசேட கடற்படை பங்களா ஒன்றிலேயே அவர் வசித்து வந்தார்.

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்ப்டவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை