தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நுவரெலியா திசாவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் (SDIG) கூற்றுப்படி, சந்தேக நபரும் அவரது மனைவியும் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து மூலம் பயணிப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் வாலாணை ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து […]

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் இன்னும் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் […]

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில கடிதமொன்றையும் அவர் எழுதியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இன்னமும் அங்கே நிறுவப்படாது இருப்பது பற்றி எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது. […]

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, கடந்த 2026 ஏப்ரல் 13 அன்று மாலை 4 மணியளவில், 320 டவுன்டன் ரோட் ஈஸ்ட் (Taunton Road East) பகுதியில் அமைந்துள்ள ‘ஓல்ட் நேவி’ (Old Navy) கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், […]

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், இரண்டு ஆண்கள் மீது டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜூன் 19 அன்று பிற்பகல் 2 மணியளவில், கிப் ஸ்திரீட்டில் (Gibb Street) உள்ள ‘ரியல் கனேடியன் சூப்பர்ஸ்டோர்’ (Real Canadian Superstore) வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு நபர் […]

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்ப்டவில்லை – சட்டத்தரணி ரனித்தா

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் […]

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு அரச கனேடிய மவுண்டெட் போலீஸ் (RCMP) பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. டேமியன் அலெக்சாண்டர் ஜேம்ஸ் பிரவுன் (Damien Alexander James Brown) என்ற நபர் பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வருகிறார்: மிரட்டல் விடுத்தல் (Uttering Threats) பிணை உத்தரவை மீறுதல் (Failing to Comply With a Release Order) அதிகாரிகளின் விளக்கத்தின்படி, பிரவுன் […]

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு, கனடாவிற்குள் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 13 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதித்துள்ளது. துராந்தே கிங்-மக்லீன் (Durante King-Mclean, 27) என்ற இந்த நபருக்கு, சட்டவிரோதமாக துப்பாக்கி வர்த்தகத்தில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பென்சில்வேனியா (Pennsylvania) நீதிமன்றம் 160 மாதங்கள் […]

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, குமுழமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு இரவு சென்ற நிலையில் இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று(23.06.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்துடன், வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் […]