யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.06.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தின் கலைகளை வளர்க்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் எனவும், கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
01.கலைஞர்களை பிரதேச செயலக ரீதியாக ஒன்றுதிரட்டி “கலைச் சங்கமம்” நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
02. இளம் கலைஞர்களுக்கான கலை பயிலரங்கத்தினை மாவட்டச் செயலகத்தில் – யூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடாத்தவும், அதில் குறைந்தது 75 கலைஞர்கள் பங்குபற்ற ஒழுங்கு செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
03.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான உத்தியோகத்தர்களுக்கான கவிதை, சிறுகதை, பேச்சு, அறிவிப்பாளர், தனி நடிப்பு, ஓவியம், நடனம் உள்ளிட்ட 16 வகையான கலைப் போட்டிகளை யூலை மாதத்திலிருந்து நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு.எம்.வித்தியானந்தநேசன், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.