திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி , கண்மணி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கொக்குவில் மத்தியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்(ஈஸ்வரி), யோகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும், இந்திரஜோதி அவர்களின் அன்புக் கணவரும், பிரசாந், காலஞ்சென்ற நிரோசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும், […]
மணல் கிரவல், அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் .

கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவிக்கையில்………. அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான மணலைப் பெற்றுக் கொள்வது மிகவும் […]
கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.06.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தின் கலைகளை வளர்க்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் எனவும், கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். 01.கலைஞர்களை […]
நுவரெலியா கொலைச் சம்பவம்: காணாமல் போன பெண் வைத்தியர் தெல்தெனியவில் காரினுள் சடலமாக மீட்பு

நுவரெலியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரின் சடலம், கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் இருந்து கடந்த புதன்கிழமை (17) மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சமீபத்தில் தனது பங்காளி/காதலருடன் நுவரெலியாவிற்குச் சென்று அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அந்த வளாகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசீலித்த போது, கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு 10:30 மணியளவில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியே தூக்கிச் […]
சுரேஷ் எந்தக் காரணமும் இன்றி துன்புறுத்தப்படுகின்றார்: எலிகள் நிறைந்த சிறிய அறையின் தரையில் தூங்குகிறார் – மனைவி மனோரி சலே

“எலிகள் நிறைந்த 6×4 அடி அளவுள்ள சிறிய அறையின் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதையடுத்து, இன்று அவருக்கு அதிக இரத்த அழுத்தம் (சர்க்கரை நோய்), கொலஸ்ட்ரால் மற்றும் தோலில் தடிப்புகள் (Skin Rash) ஏற்பட்டுள்ளன.” “அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விவகாரம் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) அறிக்கையில் ஏழுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பிரிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல்நிலை குறித்து வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகள் எவையும் பின்பற்றப்படவில்லை.” “அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக […]
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரில் பெண் சடலமாக மீட்பு: பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டனர்

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறித்து, கடந்த புதன்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்த விசாரணைகளில், உயிரிழந்தவர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என்பதும், அவர் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 […]
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை: அமெரிக்க FBI ஆவணங்களை அரசாங்கம் கோரியதா? ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய புலனாய்வு விசாரணைகளின் ஆவணங்களை, இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்தோடு, தாக்குதல்கள் நடந்த உடனடியாகவே, உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரிடம் போதிய நிபுணத்துவம் இல்லாத காரணத்தினால், அமெரிக்க அரசாங்கத்தின் ஊடாக முழுமையான விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்ததையும் அக்கட்சி நினைவு கூர்ந்துள்ளது. அத்துடன், 2019 ஏப்ரல் […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் (Private Secretary) பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (Colombo Central Crimes Investigations Bureau) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவரது செயலாளராகப் பணியாற்றிய போது, சுகீஸ்வர பண்டார அரசாங்கத்திடமிருந்து இரண்டு வெவ்வேறான சம்பளங்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் என்ற ரீதியில் ஒரு சம்பளத்தைப் பெற்றுக் […]
செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அவர்களினால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை முன்வைத்து உரையாற்றி தவிசாளர் மயூரன் அவர்கள் தன்னுடைய உரையில் இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இவ் மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் […]
யாழ். இந்துக்கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலம் 2026 கண்காட்சி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து வழங்கும் நிலம் 2026 கண்காட்சி 17.06.2026 நேற்றுக் காலை ஆரம்பமானது. எமது கலை, பண்பாடு, கலாசார மரபுரிமைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆரம்பமான மேற்படி கண்காட்சியை பொதுமக்களும் காங்கேசன்துறை வீதியில் உள்ள இந்துக்கல்லூரியின் வாயிலினூடாக சென்று இன்று 18.06.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி வரை பார்வையிடலாம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் தலைமையில், காரைநகர் […]