சலேவின் மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை கேட்பது யுத்த ரகசியங்களை அறியவே – தயாசிறி ஜயசேகர !

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவு கேட்டு வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சத்தியத்தை வெற்றிபெறச்செய்வோம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை (14) கண்டியில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

அந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது யாருக்கும் தெரியாது.சுங்க சட்டத்தை மீறியே இவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள் இந்த கொள்கலன் விடுவிப்புக்காக ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.

பௌத்த பிக்குகள் ஒருசிலரின் முறையற்ற செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த புத்த சாசனத்தையும் மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் காலை முதல் இரவுவரை போலியான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

புத்தசாசனத்தை இல்லாதொழித்து இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வரலாறுடன் தொடர்புடைய விடயங்கள் பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.இது முற்றிலும் தவறானது.இலங்கை செய்திகள்

இந்தியாவுடன் அரசாங்கம் செய்துக் கொண்ட பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரையில் பாராளுமன்றத்துக்கு கூட வெளிப்படுத்தப்படவில்லை. வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்துக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சுரேஷ் சலே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதை போன்று குற்றப்புலனாய்வு பிரிவு அவரை நடத்துகிறது. தற்போது அவரது மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் அவரை கேட்டு வருகின்றனர்.Geographic Reference

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே தற்போது அவரது மடிக்கணனியின் ரகசிய இலக்கை இவர்கள் கேட்டு வருகின்றனர்.

அதேநேரம் மத்திய கிழக்கு யுத்தத்தை காரணம் காட்டி எரிபொருட்களின் விலையை பாரியளவில் அதிகரித்திருக்கிறது. அதிக விலைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்துவிட்டு அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளார்கள். அதனால்தான் எரிபொருட்களின் விலை இந்தளவு அதிகரிக்க காரணமாகும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடையகிறது. இந்த ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் மின்கட்டணம், எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

மேலும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை 56 நாட்களில் மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். ஆனால் தித்வா அனர்த்தம் ஏற்பட்டு 7 மாதங்களாகியும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வாடகை வீடுகளில் வாழ்த்து வருகிறார்கள்.

அதனால் இந்த அரசாங்கம் தெரிவித்த எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கிறது. எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவிசாவலையில் ஆம்பிக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு கூட்டம் இன்று கண்டியில் இடம்பெறும் நிலையில் அடுத்த கூட்டம் குருணாகலையில் நடத்த இருக்கிறோம். இவ்வாறு நாடு பூராகவும் அரசாங்க்துக்கு எதிரான கூட்டங்களை நடத்தி மக்களை அணிதிரட்டிக்கொண்டு அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

TEP25OGMQZAGDCXU2QBJOPMSJU

கனடா ஒஷாவாவில் குழு மோதல்: கத்திக் குத்துக்கு இலக்கான நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

June 15, 2026

கனடா: ஒஷாவா (Oshawa) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர குழு மோதலின் போது, பலமுறை கத்திக் குத்துக்கு இலக்கான

police toro

ரொறன்ரோவில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் மீது காரை மோதிவிட்டு தப்பிய சந்தேகநபர்

June 15, 2026

கனடா: ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 15, 2026) அதிகாலை திருடப்பட்ட வாகனம் ஒன்றை மடக்கிப் பிடிக்க பொலிஸார்

4

“அதிமுக – திமுக ஒன்றாகிவிட்டன!” – ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு!

June 15, 2026

செங்கல்பட்டு: தவெக-வில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா செங்கல்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக

3

“கேள்வி கேட்பது குற்றமா?” – ஈபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடிய சி.விஜயபாஸ்கர்!

June 15, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.வி.ஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழக சட்டமன்றத்

2

கடலூர் கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? – சீமான் அசுர வேக கண்டனம்!

June 15, 2026

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம்

COQCYCLTYNAMNNME4HPOFSIENU

உலகக் கிண்ண சர்ச்சை: கனடா போட்டியைப் புறக்கணித்து காதலி கேட்டி பெர்ரியின் நிகழ்ச்சிக்குச் சென்ற ஜஸ்டின் ட்ரூடோ

June 15, 2026

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), டொராண்டோவில் நடைபெற்ற கனடா நாட்டின் முதலாவது உலகக் கிண்ண காற்பந்துப்

police rcmp

கனடா பி.ஈ.ஐ (P.E.I.) இல் வாகன விபத்து: இளஞன் ஒருவர் பலி

June 15, 2026

கனடா: இளவரசர் எட்வர்ட் தீவின் (Prince Edward Island – P.E.I.) கிங்ஸ் கவுண்டியில் (Kings County) இடம்பெற்ற மார்க்கண்ட

suresh11

சலேவின் மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை கேட்பது யுத்த ரகசியங்களை அறியவே – தயாசிறி ஜயசேகர !

June 15, 2026

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே

1732607211-Archuna-L

புலம்பெயர் அமைப்புகளின் நிதி தொடர்பில் அர்ச்சுனா விளக்கம் வழங்க வேண்டும் – சீலரத்ன தேரர் வலியுறுத்தல்

June 15, 2026

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க

pta

பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

June 15, 2026

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால்

vikatan_2021-12_7c68c14f-a020-48dd-bfde-f5a1032ed404_C_V_SHANMUGAM

மகனை அரசியலுக்கு கொண்டுவர ஈபிஎஸ் டிராமா! – சி.வி.சண்முகம் அசுர குற்றச்சாட்டு!

June 15, 2026

திண்டிவனம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக மிகப்பெரிய டிராமா செய்து கொண்டிருக்கிறார் என்று

rabies medi

காலாவதியான தடுப்பூசி சர்ச்சை: சுகாதார செயலாளரின் மௌனம் குறித்துக் கேள்வி!

June 15, 2026

கொழும்பு: இலங்கையில் நோயாளர்களுக்குக் காலாவதியான தடுப்பூசிகள் (Expired rabies vaccines) செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் பெரும் சர்ச்சையை