ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியல்வாதிகளின் அரசியல் நலன் கருதி பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைப்பதும் அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதையும் ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு முல்லைத்தீவு பொலிஸார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடத்திக்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதோடு எந்த ஒரு ஊடகவியலாளரையும் பொலிஸாரோ அல்லது வேறு எந்த அதிகாரத்தரப்போ அவர்களின் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளல் வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் செய்தியின் நம்பகத்தன்மையை நன்கு உறுதிபடுத்தியதன் பின்னரே அதனை செய்தியாக்குகின்றனர். இந்நிலையில் உண்மை செய்தியின் மூலத்தை கேட்பது உண்மையையும் அதன் நம்பக தன்மையின் சாட்சியையும் அழிப்பதற்காகவுமே. இதற்கு இடமளிக்க முடியாது.

பாலநாதன் சதீசனின் விடயத்தில் உண்மையை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அதற்கு எதிராக நடந்து கொண்டமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே தோன்றுகின்றது. இது தொடரக்கூடாது.

மக்களோடு நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைப்பதையோ, மக்களுக்கு எதிராக செயல்படுவதையோ அங்கீகரிக்க முடியாது.

இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியான சமூகத்தை உருவாக்க பெரும் கடமை ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அந்த வழியில் நின்று பாலநாதன் சதீசன் கடந்த ஆண்டுகளாக ஊடக தர்மத்தின் அறம் காத்து மக்களுக்கான ஊடகவியலாளராக செயல்பட்டு வருகின்றார்.

இவருக்கும் இத்தகையோருக்கும் எதிராக அரசியல்வாதிகளோ அவர்களின் கையாட்களான பொலிஸாரோ செயற்படுவதை உடன் நிறுத்தல் வேண்டும்.

நேர்மையாக ஊடக தொழிலில் மக்கள் பக்கம் இருந்து மக்களுக்காக மக்களின் ஊடகவியலாளர்களாக செயற்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்