முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது.
முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது நிலங்களுக்குத் திரும்ப முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை.
மன்னார் மாவட்டம், மரிச்சிக்கட்டி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 245.9 ஹெக்டேயர் நிலம், 2009ஆம் ஆண்டு முதல் கடற்படை முகாமுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடற்படை பல முறை அந்த நிலத்தின் பகுதிகளை விடுவித்துள்ளது. மிகச் சமீபத்திய காணி விடுவிப்பு 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது சுமார் 77 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டது. கடற்படை பயன்படுத்தும் நிலத்தில் அமைந்துள்ள 27 பொதுமக்கள் வீடுகளுக்காக 2012ஆம் ஆண்டில், மணல்காடு கிராமத்தில் 27 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
கடற்படை தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு முறையான வீட்டு வசதிகள் வாழ்வாதார வாய்ப்புக்கள் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த மக்களுக்கு அரசாங்கம் இதுவரை என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் தகவல் ஏதும் இல்லை.
மேலும் கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்திற்குள் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயமும், ஒரு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்புப் பாடசாலையும் அமைந்துள்ளன. அப்பகுதியை கடற்படை 77 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளதோடு அந்த இடங்களுக்கு வருவதற்கு நுழைவுப் பாதை கடற்படை விடுவித்துள்ளதோடு கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கலப்புப் பாடசாலையின் செயல்பாடுகளை எளிதாக்கும் பொருட்டு சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கத் தமிழ் கலப்புப் பள்ளிக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கடற்படை வழங்குகிறது. இலவசப் பாடசாலை போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடற்படையால் சம்பள அடிப்படையில் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் கடற்படை வெளியேற்றவோ அல்லது எந்தவொரு பொதுமக்களையும் இடம்பெயரச் செய்யவோ இல்லை. மொத்தமாக சுமார் 829 ஏக்கர் நிலப்பரப்பு, பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.