எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி: அதிமுக இரண்டாக உடையும் அபாயம்?

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்றிருந்த அந்தக்கட்சி, இந்தத் தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வைப்புத்தொகையை (Deposit) இழந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், த.வெ.க-வில் உள்ள மூத்த தலைவர் ஒருவர், அ.தி.மு.க-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க-வில் சிலர் த.வெ.க-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைப் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்தார்.

விஜய் ஒருபுறம் முதலமைச்சராகப் பொறுப்பேற்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவுகள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகச் சிலர் குற்றம் சுமத்திப் பேசியதாகத் தெரிகிறது. பின்னர் இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஒன்றுகூடினர். அங்கு பிற்பகல் 2:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராகச் சிலர் காரசாரமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 37 சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் அதிமுக சந்தித்த பிளவு போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் (37 பேர்) தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சட்ட விதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த 37 உறுப்பினர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும்.

இந்த 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ‘118’ என்ற மேஜிக் எண்ணை (பெரும்பான்மை) எட்டிவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 37 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால், சட்டசபையில் விஜய்யின் பலம் அசுர வேகத்தில் உயரும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னையில் இன்று காலை 9 மணிக்குக் கூடும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதற்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது பொதுக்குழு அல்லது கட்சி மட்டத்திலான கூட்டத்தில்தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை, இன்னும் ஓரிரு நாளில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்

hosp

இலங்கை அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைக்காக 10,000 நோயாளிகள் காத்திருப்பு: மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான பரிசோதனைகளுக்காக சுமார் 10,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில்

rain

இலங்கையில் சீரற்ற காலநிலை: மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு

vikatan_2026-05-08_0dw9lsvc_Untitled-8

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை! தவெக-வுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகள் பறிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப்

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க