புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத் தயாராக இருப்பதாக புடின் முன்வந்ததாகவும் ஆனால் அந்த உதவியை தாம் நிராகரித்ததாகவும், அதற்கு பதிலாக உக்ரைன் போரைக் கைவிட வேண்டும் என புடினிடம் கேட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு கண்காணிப்பு அமைப்பான International Atomic Energy Agency (IAEA) தெரிவித்ததாவது, ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றும் முயற்சியில் ரஷ்யா இன்னும் தயாராக இருப்பதாகவம் இது அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய கூறாகக் கருதப்படுகிறது.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை “நியூக்ளியர் டஸ்ட்” என ட்ரம்ப் குறிப்பிட்டு, அதையே ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கிய முக்கிய காரணமாக விளக்கினார்.

இந்த போர் தற்போது 60 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. “ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம்,” என அவர் தெரிவித்ததுடன், அமெரிக்கா ஈரானின் இராணுவ திறன்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் கூறினார்.

ஈரானிடம் உள்ள ‘நியூக்ளியர் டஸ்ட்’ அளவு The New York Times வெளியிட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், ட்ரம்ப் தனது முதல் ஆட்சி காலத்தில் ஈரானுடன் செய்யப்பட்ட அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கியதையடுத்து, ஈரான் சுமார் 22,000 பவுண்ட் (11 டன்) அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிவைத்துள்ளார்.

IAEA தரவுகளின்படி: 440.9 கிலோ (972 பவுண்ட்) யுரேனியம் 60% வரை செறிவூட்டப்பட்டுள்ளது இது அணு குண்டு தயாரிக்க தேவையான 90% அளவிற்கு மிக அருகில் இருப்பதால் உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.

IAEA கணிப்பின்படி, இந்த யுரேனியம் கையிருப்பின் பெரும்பகுதி Isfahan Nuclear Facility பகுதியில் இருக்கலாம்.

இந்த நிலையம் 2025 ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதல்களில் சேதமடைந்தது.

IAEA தலைவர் Rafael Grossi கூறுகையில்: 2025 ஜூன் மாதப் போரின் போது இந்த பொருள் அங்கு இருந்திருக்கலாம் தற்போது அது அங்கேயே இருக்கக்கூடும் ஆனால் நேரடி ஆய்வு செய்ய முடியாததால் உறுதி செய்ய முடியவில்லை ஈரான் IAEA ஆய்வுகளை நிறுத்தியதால், செயற்கைக்கோள் படங்கள் மூலம் மட்டுமே கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

குறைந்த செறிவில் → மின்சாரம் உற்பத்திக்கு பயன்படும் அதிக செறிவில் → அணு ஆயுதமாக மாறும்.

2006ஆம் ஆண்டு முதல் ஈரான் தொழில்துறை அளவில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது.

2015ஆம் ஆண்டு, Barack Obama தலைமையில் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் ஈரானுடன் ஒப்பந்தம் செய்தன.

செறிவூட்டல் அளவு 3.67% ஆக கட்டுப்படுத்தப்பட்டது கையிருப்பு அளவும் குறைக்கப்பட்டது ஆனால் 2018ல் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் மீண்டும் அதிக அளவில் செறிவூட்டத் தொடங்கியது.

2025ல் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் IAEA உடன் ஒத்துழைப்பை நிறுத்தியது அதனால் யுரேனியம் கையிருப்பின் சரியான இருப்பிடம் தெரியவில்லை ஈரான் Nuclear Non-Proliferation Treaty (NPT) உடன்படிக்கையின் உறுப்பினராக இருப்பதால், அதன் அணு நிலையங்களை IAEA ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை.

ஈரானின் 11 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உலக பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ரஷ்யா உதவ முன்வந்தாலும், அமெரிக்கா அதை நிராகரித்துள்ளது. தற்போது அந்த யுரேனியம் எங்கு உள்ளது என்பது தெளிவாக தெரியாதது சர்வதேச கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது