ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி நடைபெறும் விதம்:
போலி தொலைபேசி அழைப்புகள்: திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலக்கத்தை ஒத்த +94115226126, +0115226126 ஆகிய இலக்கங்களிலிருந்தும், 0771167739, 0742756098 ஆகிய கைபேசி இலக்கங்களிலிருந்தும் பொதுமக்களுக்கு அழைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
போலி செயலி (Mobile App): டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-தேசிய அடையாள அட்டை (e-NIC) பதிவு செய்வதாகக் கூறி, அரச இலச்சினையைப் பயன்படுத்திய போலி செயலி ஒன்றை மோசடிக்காரர்கள் உருவாக்கியுள்ளனர்.
போலி இணையதளம்: திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் https://drpgov-lk[.]com என்ற போலி இணையதளம் ஊடாகத் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
திணைக்களத்தின் விளக்கம்:
இவ்வாறான மின்னணு முறையிலான பதிவுகளைத் திணைக்களம் தற்போது முன்னெடுக்கவில்லை.
திணைக்கள அதிகாரிகள் ஒருபோதும் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தனிப்பட்ட தகவல்களைக் கோருவதில்லை.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது இணையதளங்களுக்கு உங்களது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.