பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய நால்வர் கைது

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், மேலும் ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29) பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மீட்டியாகொடை மாவத்தகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடொன்றினைச் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கான 6 தோட்டாக்கள், 13 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

மேலும் அதே வீட்டிலிருந்த மற்றொரு நபரும் 14 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதானார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும், கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியவருமே கைதாகியுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவேளை மீட்டியாகொடை வீட்டில் வைத்து 11 கிராம் 500 மில்லிகிராம், 10 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் மேலும் இரு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் கடந்த வருடம் மே 3 ஆம் திகதி எரணவில பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதேவேளை கைதான நபர்கள் 22, 23, 28 மற்றும் 34 வயதுடைய மீட்டியாகொடை மற்றும் மாதம்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக்குழுத் தலைவன் என அறியப்படும் நபர் ஒருவரின் சகோதரருக்குச் சொந்தமான வீட்டிலேயே இவர்கள் தங்கியிருந்து மற்றுமொரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை