10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு,

10 இலட்சம்

தொழிலாளர்களின்

பாதுகாப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இக்கூட்டத்தில் மிகுந்த கவலை வெளியிடப்பட்டது.

போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எவ்வாறான அவசரத் திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் நாட்டுக்கு ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பு என்பன குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அரசிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நெருக்கடியானது வெறும் சர்வதேசப் பிரச்சினை மட்டுமல்ல, அது இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்புடையது என்பதை இக்கூட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:- மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, அங்கு பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இதன்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளன.

இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தின் முடிவில், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தவும், உரிய அழுத்தங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி இலங்கைக்குப் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றுகூடல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

ki

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் திடீர் வாகன சோதனை

May 2, 2026

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை

thar

தர்பூசணியால் மும்பை குடும்பம் மர்ம மரணம்?

May 2, 2026

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழம் சாப்பிட்டதே காரணம் என பரவி வந்த செய்திகள்

ir

ஈரானில் குண்டு வெடிப்பு: பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி!

May 2, 2026

ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானின்

dailythanthi_2026-05-02_fat57vnp_klere copy

வேளாங்கண்ணி வருகை ரத்து: மணிக்கணக்கில் காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!

May 2, 2026

நாகப்பட்டினம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும்

dailythanthi_2026-05-02_oxhtu1qb_amker

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்!

May 2, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். நேற்று முன்தினம்

Chennai_High_Court

சென்னை, மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை; அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்!

May 2, 2026

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை

agni-natchathiram-2024-109780511

“மே 4 முதல் கத்தரி வெயில் ஆரம்பம்; ஆனால் கோடை மழைக்கு அதிக வாய்ப்பு” – வானிலை ஆய்வாளர் தகவல்!

May 2, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை காலத்தின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி

HHM6wh4a4AAZRW-

பாஸ்டேக்கில் பணமில்லை: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு – பயணிகள் தவிப்பு!

May 2, 2026

சிவகங்கை: மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், பாஸ்டேக் (FASTag) கணக்கில் போதிய பணம் இல்லாததால்

24-66546b392f06b

“தவெக ஒரு முக்கிய சக்தி; தேர்தல் முடிவுகளில் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” – வைகோ பரபரப்பு பேட்டி!

May 2, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை

image1-2026-05-01t170136-014-1777635112 copy

“அறிவிக்கப்படாத லாக்டவுன் சூழல்” – சிலிண்டர் விலை உயர்வால் டீ, டிபன் கடைகள் கடும் பாதிப்பு!

May 2, 2026

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத

image

“சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” – விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்!

May 2, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா

1200-675-26602057-thumbnail-16x9-nainar

“விஜய் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார்; மே 4-ல் திமுகவின் மோசமான ஆட்சிக்கு முடிவு வரும்” – நயினார் நாகேந்திரன் அதிரடி!

May 2, 2026

கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர்