இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது – றிஷாட் பதியுதீன்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வு பற்றிய சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இலங்கை சுதந்திரமடையும் போது தனிநபர் வருமானம் 48 டொலர், ஆனால் அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர், ஆகவே ஜப்பானை விட ஒரு டொலர் வித்தியாசத்தில் தான் அன்று இருந்தோம், இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம், நமது நாடு இனவாதத்தினால் தான் குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.

ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.

அத்துடன் முஸ்லிம், தமிழ், சிங்கள மற்றும் கத்தோலிக்க என ஒவ்வொரு மார்க்கத்திற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ’இலங்கையர் தினம்’ நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அரசினால் முறைப்படுத்தப்படவுள்ள “இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், ஹிஸ்புல்லாஹ், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ரவீகரன், மஸ்தான், திகாம்பரம், வைத்தியர் அர்ச்சுனா, மஸ்தான் மற்றும் சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

2

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

June 27, 2026

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

photo-collage.png

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

June 27, 2026

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண

muk

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

June 27, 2026

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய

suresh11

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதி

June 27, 2026

அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய

deng

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

June 27, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய

bar

சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவித்தல்

June 27, 2026

தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை அவதானிப்பதும் அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைச் சங்கத்திற்கு

Police-LTTE-song-arrest

232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

June 27, 2026

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

A nation

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்: 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது!

June 27, 2026

லங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்

Bak

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான கே. பாக்யராஜ் (73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

730530280_1631146617985168_3040783259244938520_n

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள்: அல்பெர்ட்டா நபர் மீது வழக்கு!

June 27, 2026

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை (12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக,

730992711_1542493037581043_680212040586658843_n

டொராண்டோவில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேகநபரைத் தேடும் காவல்துறை

June 27, 2026

கென்னடி (Kennedy) மற்றும் எக்லிண்டன் (Eglinton) பகுதிக்கருகே நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, 34 வயதுடைய நபர் ஒருவரைத்

image_a0e6a0260b

தியத்தலாவை அருகே இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 40 பேர் காயம்

June 27, 2026

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) க்குச் சொந்தமான பேருந்து ஒன்று, தியத்தலாவை