20 கோடி கலப்பட நெய் லட்டுகள் விற்பனை;  திருப்பதி தலைவர்

“திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த, 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், 49 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை,” என, தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் திருப் பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

விசாரணை இங்கு, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ‘டெண்டர்’ விடப்பட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நெய் பெறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அவ்வாறு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது.சம்பந்தப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இதில், உத்தரகண்டைச் சேர்ந்த, ‘போலே பாபா’ பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய்யை திருமலை கோவிலுக்கு வினியோகித்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் சமீபத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., குழு, அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உபன்னாவை கைது செய்தது.

இந்நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தான தற்போதைய தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்டுள்ளார்.

புள்ளிவிபரம் அவர் கூறுகையில், “கடந்த, 2019 – 2024 வரையிலான காலக்கட்டத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, 48.76 கோடி லட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை.

”கோவிலில் தினசரி மக்கள் வருகை, கொள்முதல் விபரங்கள், லட்டு உற்பத்தி மற்றும் விற்பனை புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து எளிய கணக்கீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது,” என்றார்.

‘இந்த ஐந்து ஆண்டுகளில், 11 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும், கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

‘வி.வி.ஐ.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள் கூட கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாது’ என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? – அன்புமணி ராமதாஸ்

June 27, 2026

‘சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள்

3

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் நிறைவேறியது தீர்மானம்

June 27, 2026

‘சென்னை: சுமார் 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்

2

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

June 27, 2026

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

photo-collage.png

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

June 27, 2026

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண

muk

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

June 27, 2026

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய

suresh11

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதி

June 27, 2026

அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய

deng

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

June 27, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய

bar

சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவித்தல்

June 27, 2026

தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை அவதானிப்பதும் அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைச் சங்கத்திற்கு

Police-LTTE-song-arrest

232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

June 27, 2026

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

A nation

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்: 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது!

June 27, 2026

லங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்

Bak

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான கே. பாக்யராஜ் (73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

730530280_1631146617985168_3040783259244938520_n

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள்: அல்பெர்ட்டா நபர் மீது வழக்கு!

June 27, 2026

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை (12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக,