தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 8 மாத கர்ப்பிணி வேட்பாளர் அனிஷ் பாத்திமா மீது திமுகவினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அம்மாபேட்டை அருகே உக்கடை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியை வேட்பாளர் அனிஷ் பாத்திமா பார்வையிடச் சென்றார். அப்போது, வாக்குச்சாவடிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில் அங்கிருந்தவர்கள் அனிஷ் பாத்திமாவை கீழே தள்ளிவிட்டு, செங்கற்களால் தாக்கியதாக அவரது கணவர் ஷேக் அம்சத்அலி குற்றம் சாட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து மயக்கமடைந்த அனிஷ் பாத்திமா, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை தரப்பில், “48 மணி நேரம் கழித்தே வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துத் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தஞ்சை வேட்பாளர் கிருஷ்ணகுமார் எச்சரித்துள்ளார்.
#Papanasam #NTK #AnishFathima #Seeman #ThanjavurPolitics #DMKAttack #ViolenceInPolls #TNElection2026 #BreakingNews #PregnantCandidate #PapanasamConstituency #TamilPolitics #JusticeForAnishFathima #PoliceInvestigation #ThanjavurNews #Election2026 #DemocraticDuty #HumanityFirst #NaamTamilarKatchi #UkkadaiIncident