சென்னை:
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து பல இடங்களில் மதுபானக் கடைகள் மூடப்படாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போது மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் 82, கோவை மண்டலத்தில் 179, சேலம் மண்டலத்தில் 82, திருச்சி மண்டலத்தில் 84 மற்றும் மதுரை மண்டலத்தில் 290 என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மதுக்கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. தற்பொழுது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, இது போன்ற முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுப்பதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்தது உறுதியானதை அடுத்து, சுமார் 200 டாஸ்மாக் பணியாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இனிவரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tasmac #Vijay #TvkGovernment #LiquorShop #TamilNadu #TasmacList #CorruptionFree #VijayGovernment #TasmacClosed #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #PublicWelfare #TasmacStaff #TasmacIssue #TamilNaduNews #GovernmentAction #Corruption #Politics2026 #TasmacListReleased #TNPolitics #AntiCorruption