செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 405 என்புக்கூடுகள் அடையாளம்

ம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (21) ஞாயிற்றுக்கிழமை 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில், இது வரையிலான அகழ்வு பணிகளின் போது 405 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 377 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் மேலும் பல விடயங்கள் சேர்க்கப்பட வேண்டும்

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, 48 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ் இயந்திரமொன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (21) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் […]

ஆசிய அஞ்சலோட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை

சீனாவில் நடைபெற்ற 2026 ஆசிய அஞ்சலோட்ட சேம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்று இன்று (21) பதிவாகியுள்ளது. 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில், போட்டித்தூரத்தை இலங்கை அணி 38.63 வினாடிகளில் நிறைவு செய்து இந்த புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது. குறித்த அஞ்சலோட்ட அணியில் தினேத் வீரரத்ன, சாமோத் யோதசிங்க, சலித் பியுமால் மற்றும் மேரோன் விஜேசிங்க ஆகியோர் இலங்கை அணி சார்பில் பங்கேற்றிருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கோல் கொஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய […]

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவார் – ட்ரம்ப்

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியை இராஜினாமா செய்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மிகவும் முக்கியமான இரண்டு விடயங்களான குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய இரண்டு துறைகளில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துள்ளார் என்று ட்ரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ஸ்டார்மருக்குத் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டார்மரின் அமைச்சரவையில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் தொழிற்கட்சிக்குள் அவருக்குக் குறைந்து வரும் ஆதரவு […]

டெங்கு நோயாளர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாட்டில் 46,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். தற்போது நாளாந்தம் 600 முதல் 650 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 12,196 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் கபில […]

டொராண்டோவின் கிழக்குப்பகுதியில் காரணமின்றி நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம்: நபர் ஒருவர் கைது

இந்த மாத தொடக்கத்தில் நபர் ஒருவரைக் காரணமின்றித் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோ போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த ஜூன் 12 ஆம் தேதி மாலை 5 மணியளவில் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் பிராட்வியூ அவென்யூ (Broadview Avenue) பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தனது […]

மிசிசாகாவில் விசாரணை நடுவே பீல் பிராந்திய காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

கனடா, மிசிசாகா (Mississauga) பகுதியில் இன்று காலை நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது, காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதிகாரிகள் டொர்ப்ராம் வீதி (Torbram Road) மற்றும் டெரி வீதி கிழக்கு (Derry Road East) ஆகிய பகுதிகள் இணைந்திடும் இடத்தில் விசாரணை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் அந்தப் பாதைகளில் நீண்ட […]

“திமுகவை விட்டு யார் சென்றாலும் கவலை இல்லை!” – அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி!

தூத்துக்குடி: திருச்செந்தூர் ஆத்தூரில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய தவெக அரசின் செயல்பாடு மற்றும் திமுக-வின் உறுதி குறித்துப் பேசினார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்தாலே, அவர் ஆட்சிப் பொறுப்பால் எவ்வளவு சங்கடப்படுகிறார் என்பது புரிகிறது என்று கூறிய அவர், விரைவில் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தவெக-வினர் அவையைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்று எச்சரித்தார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் தான் எப்போதும் […]

“நீட் தற்கொலைகள் கவலையளிக்கிறது!” – சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை: நீட் தேர்வு அச்சத்தினால் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மருத்துவக் கல்விக்காக நீட் தேர்வு தேவையில்லை என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர், சட்ட ரீதியான போராட்டங்களை வலுப்படுத்தக் கேட்டுக்கொண்டுள்ளார். “நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் அச்சமடைவதற்கு, மருத்துவக் […]

“திருவள்ளூர் இறால் தொழிற்சாலையில் பயங்கர அமோனியா வாயு கசிவு!” – 7 பேர் பலி; 40 பேருக்குத் தீவிர சிகிச்சை!

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகிலுள்ள கண்ணிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இதுவரை 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்குத் […]