திருமதி லூர்ட்ஸ் புஷ்பராணி செல்வராஜா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லூர்ட்ஸ் புஷ்பராணி செல்வராஜா அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் திரவியம், மாரியம்மா பிலிப் அவர்களின் ஆருயிர் மகளும் காலஞ்சென்ற செல்வராஜா அந்தோனிப்பிள்ளை (கிளிநொச்சி கச்சேரி சமூகசேவைப் பிரிவு பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, மேரிப்பிள்ளை (செல்லம்மா) ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான ஜசிந்தா சூசைதாஸ், பெனிட்டா பிலிப், அன்ரன் பிலிப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் […]
வின்ட்சர் வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

வின்ட்சர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரைக் கண்டறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வின்ட்சர் பொலிஸ் சேவையின் தகவல்படி, 2024 ஜூலை மாதம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக 28 வயதான அல்வாசி அல் லத்தீப் (Alwassi Al Latif) என்பவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தேடப்பட்டு வருகிறார். சந்தேக நபர் பாதிக்கப்பட்ட ஒருவரை வாகனத்தில் வலுக்கட்டாயமாக அடைத்து […]
இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கணினித் தரவு அமைப்பு அமைந்துள்ள பகுதியிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் அல்லது தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனடா குடியேற்ற மோசடி வழக்கு; ரெஜினா நகரைச் சேர்ந்தவருக்கு தண்டனை

கனடா எல்லை சேவைகள் முகமையின் (CBSA) பல வருட கால புலனாய்வைத் தொடர்ந்து, ரெஜினா (Regina) நகரைச் சேர்ந்த ஒருவர் குடியேற்ற மோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அப்துல்காதிர் அலி என்பவர், குடியேற்ற மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை ஏற்று பிப்ரவரி 17, 2026 அன்று குற்றவாளி என ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை காலம், 200 மணிநேர சமூக சேவை மற்றும் 75,000 டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில், […]
போலிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி: சந்தேக நபர் தேடப்படுகிறார்

போமன்வில் (Bowmanville) மற்றும் கோபர்க் (Cobourg) ஆகிய பகுதிகளில் போலிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஜனவரி 17 அன்று, கிளாரிங்டன் புலிவார்டில் (Clarington Boulevard) உள்ள ‘த ஹோம் டிப்போ’ (The Home Depot) கடைக்குச் சென்ற நபர் ஒருவர், போலிப் பணத்தைப் பயன்படுத்திப் பல பொருட்களை வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதே நபர் டி பால்மா […]
சித்ரா பௌர்ணமியின் ஆன்மீக முக்கியத்துவம்

2026-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 01 (சித்திரை 18) வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தமிழ் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி, தமிழர்களின் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாள் ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, பண்பாட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சித்ரா பௌர்ணமியின் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து விரிவாக காண்போம். தமிழர்களின் பாரம்பரியக் காலண்டரில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களில் ஒன்று சித்ரா […]
ஈரான் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல் – ரொயிட்டர்ஸ்

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் நேற்று (30) அறிவித்துள்ளது. இது ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களைச் சிக்கலாக்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போர் இரண்டு மாதங்களைக் கடந்தும், முக்கிய கடல் பாதையான நீரிணை மூடப்பட்டே உள்ளது. இது உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு […]
பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது. இன்று (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 49 […]
கடத்தி வரப்பட்ட 994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் விசேட வீதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சுங்க வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 994 கிலோ […]
மே தின பாதுகாப்பு குறித்து…
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களை உள்ளடக்கியதாக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மே […]