சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது அவதூறுப் பரப்புரை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் அவதூறுப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இளைஞர் முன்னணியினர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை அளித்தனர். தேசிய மக்கள் சக்தியின் (NPP) சமூக வலைதளக் கணக்குகளின் ஊடாக இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் மூலம் முன்னாள் […]

வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – தவபாலன்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: புத்தசாசன அமைச்சர் வெடுக்குநாறி மலை பௌத்தத்திற்குரியது எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க முடியாது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களை கடந்த அரசாங்கங்களைப் போன்று […]

இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் […]

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கைகளின் போது, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படும் இலங்கை குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்கள் டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளாலேயே வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புப் […]

விவசாய அமைச்சர் லால்காந்தவிற்கு 6.7 கோடி பெறுமதியான சொத்துக்கள்!

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து விபர அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூகத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் தனது சொத்து விபர அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, அனைத்து அரசியல்வாதிகளும் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய […]

கவலைக்கிடமான நிலையில் மொன்ட்ரியலில் மர்மப் பொருளால் தாக்கப்பட்ட நபர்!

வியாழக்கிழமை அதிகாலை மொன்ட்ரியலின் தென்மேற்குப் பகுதியில் தாக்கப்பட்ட நபர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று 2:30 மணி அளவில் மொன்ட்ரியல் பொலிஸாருக்கு (SPVM) பல அவசர அழைப்புகள் (911) கிடைத்தன. பார்க் கார்னோ (Parc Garneau) வீதிக்கு அருகிலுள்ள மான்க் புலிவார்ட் (Monk Boulevard) பகுதியில், நபர் ஒருவர் மழுங்கிய பொருளை (blunt object) கையில் வைத்துக்கொண்டு அவ்வழியே செல்வபர்களை அச்சுறுத்துவதாகத் தகவல் கிடைத்தது. பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, உடலின் மேல் […]

நெதன்யாகு மற்றும் ஜோசப் அவ்ன் ஆகியோருக்கு வெள்ளை மாளிகைக்கு அழைப்பு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் ஆகியோரை மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகைக்கு (White House) அழைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். போர்நிறுத்தத்தை தொடர்ந்து அழைப்பு: இரு நாடுகளுக்கும் இடையே 10 நாள் போர்நிறுத்தம் இன்று மாலை 17:00 EST (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:30 மணி) முதல் தொடங்கும் என டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ட்ரூத் சோஷியல் பதிவு: “இரு தரப்பினரும் அமைதியை […]

பேருந்து கட்டணத்தை இனி அட்டை மூலம் செலுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கு இனிவரும் காலங்களில் அட்டைகளை (Cards) மட்டுமே பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அதன் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நடைமுறை இ.போ.ச சேவையில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். நேற்று  (16) மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இ.போ.ச […]

மற்றொரு மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றையும் அதில் இருந்த 4 சந்தேகநபர்களையும் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த நெடுநாள் படகு, சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாக கடற்படை […]

கனடா – மிசிசாகாவில் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம்; 12 மணி நேரத்தில் டிரெய்லர் மீட்பு!

கனடாவின்மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள கே.ரி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் (KT Group of Companies) ஏப்ரல் 16 வியாழக்கிழமை அதிகாலை திட்டமிட்ட கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வியாழன் ( ஏப்ரல் 16) நள்ளிரவு சுமார் 12:50 (கனேடிய நேரம்) மணியளவில், அடையாளம் தெரியாத குழுவினர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி டிரெய்லரை திருடிச் சென்றுள்ளனர். இந்த டிரெய்லர் இரும்பு பூட்டுடன் பாதுகாப்பாக பூட்டப்பட்டிருந்தபோதிலும், குற்றவாளிகள் இரும்பு […]