அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து பதவி விலகேன்: கியூபா ஜனாதிபதி அதிரடி

அமெரிக்காவின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் தான் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என கியூபா ஜனாதிபதி மிக்வேல் டயஸ்-கெனெல் (Miguel Diaz-Canel) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகமான NBC நியூஸிற்கு அளித்த நேர்காணலில், “பதவி விலகல் என்பது எங்கள் அகராதியிலேயே இல்லை” என்று அவர் கூறியுள்ளார். கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் நாடு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கியூபாவின் தலைவர்களை அமெரிக்க அரசு தேர்ந்தெடுப்பதில்லை என்றும், […]
ஈரானின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும்!

ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள், தெஹ்ரான் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதி செய்வதில் முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் விரைவாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றாலும், எப்படியாவது இதை நாம் முடித்துவிடுவோம். ஈரான் தடுத்துள்ள அந்த நீர்வழிப்பாதை வழியாக தடையற்ற போக்குவரத்தை உறுதி […]
தேர்தல் செயலகத்திடமிருந்து ஆலோசனையை கோருகின்றது நாடாளுமன்ற குழு

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது. குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள […]
மத்திய கிழக்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் வலியுறுத்தல்

மத்திய கிழக்கு மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே நிரந்தரப் போர்நிறுத்தம் மற்றும் நீடித்த பேச்சுவார்த்தை அவசியம் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து முன்மொழிந்துள்ள புதிய ஐந்து அம்சத் திட்டத்தை சுட்டிக்காட்டி, இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) இதனைத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, ‘போர்நிறுத்தம்’ (Ceasefire), ‘பேச்சுவார்த்தை’ (Talk), மற்றும் ‘உறுதிப்படுத்துதல்’ (Ensure) ஆகிய மூன்று முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று தூதுவர் […]
கனடா அகதிகள் விண்ணப்பம்: 30,000 பேருக்குத் தகுதி இல்லை – குடிவரவுத் திணைக்களம்

கனடாவின் குடிவரவுத் திணைக்களம் (IRCC), அகதி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கவலையளிக்கும் கடிதத்தை அனுப்பி வருகிறது. அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கலாம் என்றும், சிலரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அந்தக் கடிதங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் ஒட்டாவாவால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் (Bill C-12) மூலம் அகதி விண்ணப்ப நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30,000 விண்ணப்பதாரர்கள் பாதிப்பு: முதன்முறையாக இந்தச் சட்டத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பது தற்போது வெளிச்சத்திற்கு […]
நிலவுப் பயணத்தில் புதிய மைல்கல்; ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்

ஒன்பது நாட்கள் நீடித்த தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். விண்வெளி வீரர்களைச் சுமந்து வந்த விண்கலம், பிரித்தானிய நேரப்படி அதிகாலை 01:07 மணிக்கும் (அமெரிக்க நேரப்படி இரவு 20:07), பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து இறங்கியது (Splashdown). விண்கலத்தின் தளபதி ரீட் வைஸ்மேன் (Reid Wiseman), தனது குழுவினர் அனைவரும் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது ஹெலிகாப்டர் […]
ஆர்ட்டெமிஸ் வீரர்களை வாழ்த்தினார் கனடிய பிரதமர்

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்களுக்குப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது வாழ்த்துகளை ட்விட்டர் (X) வாயிலாகத் தெரிவித்துள்ளார். “ஆர்ட்டெமிஸ் II குழுவினர் பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த கர்னல் ஹேன்சன் (Colonel Hansen) மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள். தாய்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.”என தெரிவித்துள்ளார் குறிப்பு: ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணித்த நான்கு வீரர்களில் ஒருவரான ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கனடாவில் மார்ச் மாதம் 14,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

கனடாவில் மார்ச் மாதம் 14,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் வேலையின்மை விகிதம் மாற்றமின்றி 6.7 சதவீதமாகவே நீடிப்பதாக கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) வெள்ளிக்கிழமை(10) தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் 84,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலையின்மை விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக உயர்ந்திருந்தது. மார்ச் மாத வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், கடந்த மாத சரிவிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதை இது காட்டுகிறது. இயற்கை வளங்கள் மற்றும் சேவைகள்: […]
10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வடக்கு கடற்பரப்பின், கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பகுதியில் கடந்த 08 ஆம் திகதி கடற்படையினரால் ஒரு படகுடன் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திணைக்கள அதிகாரிகள் […]
குப்பை மேட்டு தீ; பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதியான குப்பை மேட்டில் நேற்று (10) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மொரட்டுவை தீயணைப்புப் பிரிவு, இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளியாகும் புகையானது நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும் என்பதால், குப்பை மேட்டைச் சூழவுள்ள உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், […]