கனமழை; பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், […]

இலங்கைக்கு பாகிஸ்தான் அமைச்சர் விஜயம்!

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜனைத் சவுத்திரி இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார் . அமைச்சர் மொஹமட் ஜனைத் சவுத்திரி இன்று செவ்வாய்க்கிழமை (09) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இலங்கை-பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நட்புறவைக் கொண்டுள்ள நாடு, இலங்கை ஊடகவியலாளர்கள் பாக்கிஸ்தான் நாட்டுக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட போரிடரினால் இலங்கைக்கு பாகிஸ்தான் உடனடி நிவாரணங்களை உடன் […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவேகா பயிற்சி நிலையத்தின் வெள்ள நிவாரண பணி

நாட்டில் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு விவேகா பயிற்சி நிலையம் வெள்ள நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது. அதன் முதல் கட்டமாக நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு பொதி செய்யும் வேலைகள் கடந்து ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. அவ்வேளை விவேகா பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் K. T. குருசாமி அவர்கள் கருத்துரைக்கும் போது அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலியையும் பாதிக்கப்பட்ட […]

பிரதமர் தலைமையில் அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறைக் கலந்துரையாடல்

வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி (World Bank), மற்றும் ஐக்கிய நாடுகள் திட்டச் சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன் போது உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி, தினசரி சரியான […]

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு

ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். இன்று (டிச.,09) டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் […]

செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல்; மேலுமொருவர் கைது

டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான். கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகேயுள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்புடைய உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது. […]

நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுக வின் வேலை – நடிகர் விஜய்

திமுகவை நம்பாதீங்க, உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார். புதுச்சேரியில் உப்பளம் துறைமுக திடலில் தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். கரூர் துயரத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் முதல் முறையாக இன்று தான் அவர் பங்கேற்றார். பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; இந்த மத்திய அரசுக்கு தான் தமிழகம் ஒரு தனி மாநிலம். புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். […]

வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து அவருடைய டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் எஸ்கே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எஸ்கே, வெங்கட் பிரபு காம்போவில் உருவாகும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையில் தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை […]

புகையிரதத்துடன் மோதி கார் விபத்து

காலி, பியதிகம புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்கள் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சூர்யா 47’ படத்தில் இணைந்த நடிகர்…

சூர்யாவின் கருப்பு மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் அவருடைய அடுத்த படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ படம் உருவாகவுள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகியுள்ளது. இதில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கருப்பு’ முதலில் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து வெங்கி அட்லுரியின் படம் வெளியாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக […]