பிரதமர் தலைமையில் அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறைக் கலந்துரையாடல்

வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி (World Bank), மற்றும் ஐக்கிய நாடுகள் திட்டச் சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி, தினசரி சரியான நேரத்தில் வினைத்திறன்மிக்க முடிவுகளை எடுப்பதற்கு, முறையான தகவல் மற்றும் தரவு சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு முயற்சிகளை வழிநடத்துவதற்கு துல்லியமான தரவுப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது, UNDP-இன் பேரிடருக்குப் பிந்தைய மதிப்பீடு (Global Rapid Post-Disaster Damage Estimation – GRADE) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தேவை மதிப்பீட்டுச் செயல்முறையை சர்வதேசப் பிரதிநிதிகள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். இது புவியியல் தகவல் தொழில்நுட்பம் (GIS), செய்மதிப் படங்கள் (satellite imagery) மற்றும் தரைமட்டத் தரவுகளை ஒருங்கிணைத்து, பேரிடருக்குப் பிந்தைய நிகழ்நேரத்தில், நடைமுறைப்படுத்தக்கூடிய நுண்ணறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்ட இடங்கள், சமூகங்கள், உள்கட்டமைப்புச் சேதங்கள், கழிவுகளின் அளவு பற்றிய மதிப்பீடுகள் மற்றும் நிலப்பயன்பாட்டின் மாற்றங்களை அடையாளம் காண்பதற்கு இது மிகவும் அவசியமான தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய UNDP பிரதிநிதிகள், அனர்த்தத்திற்குப் பிந்தைய தீர்வுகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் நெருக்கமாக ஒத்துழைக்கவும், தொடர்ச்சியான பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் கலாநிதி கெவோர்க் சர்க்ஸ்யன் Dr. Gevorg Sargsyan, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா Ms. Azusa Kubota, ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகள் அலுவலகத்தின் (UNOPS) தெற்காசியப் பணிப்பாளர், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. சாகரிகா போகஹாவத்த மற்றும் தேசியத் திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

“ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!” – ஆளுநர் மசோதா விவகாரத்தில் தவெக அரசுக்கு சிபிஎம் அசுர வேக நெத்தியடி கோரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைத் தார்மீக ரீதியாக நிலைநாட்டும் வகையில், முந்தைய ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை போராடிப் பெறப்பட்ட

25-67f763c02fb13

“16 நாட்களாகியும் 717 கடைகளும் மூடப்படவில்லை!” – முதலமைச்சர் விஜய்யின் மதுக்கடை காலக்கெடு குறித்து அன்புமணி ராமதாஸ் அசுர வேகக் கேள்வி!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட வேண்டும்

canada acc

டொராண்டோ மேற்குப் பகுதியில் நள்ளிரவு விபத்து: பெண் அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

May 30, 2026

சனிக்கிழமை அதிகாலை டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வாகனம் மோதியதில் காயமடைந்த பெண் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.