2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை – முன்னாள் கடற்படை தளபதியை மீண்டும் பிரதிவாதியாக இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை மீண்டும் பிரதிவாதியாக இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்த சந்தேக நபரான லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சிக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வசதி செய்து கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியுமான ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவிக்க 2020 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் அனுமதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2021 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, அவர் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு (நேவி சம்பத்) அடைக்கலம் கொடுத்ததாக விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் 2018 நவம்பரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், டிசம்பர் 2018 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல நிதியுதவி செய்ததாகவும், விசாரணைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அப்போது குற்றம் சாட்டியிருந்தது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, இரண்டாவது சந்தேக நபர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகளைச் செய்திருந்தார். லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கும் உதவியதாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அத்மிரல் விஜேகுணரத்ன விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னைய நீதவான் வழங்கிய விடுவிப்பு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் குறித்து நீண்ட விசாரணை நடத்திய கௌரவ நீதவான் நீதிமன்றம், அந்த விடுவிப்பு உத்தரவில் குறைபாடுகள் உள்ளதாகத் தீர்மானித்தது. இதன்படி, ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் ஒரு சந்தேக நபராக (பிரதிவாதியாக) பெயரிட்டு, அவருக்கு எதிரான உரிய குற்றப்பத்திரிகைகள் மற்றும் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

திறந்த நீதிமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை விரிவாக அறிவித்த நீதவான், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.