சென்னை:
“எனது தந்தை குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்யவில்லை; சினிமா தயாரிப்பாளர்கள் பலருக்குக் கொடுத்த 20 கோடி ரூபாய் கடன் தொகை திரும்ப வராததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் தான் அவரது இந்த முடிவுக்குக் காரணம்” என்று மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் சுரேஷ் ராஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் (85) சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகையே உலுக்கியுள்ளது. மேடைகளில் மிகவும் தைரியமாகவும் வெளிப்படையான கருத்துக்களையும் பேசி வந்த ஒரு துணிச்சலான மனிதர், குடும்பப் பிரிவினவாலும் உடல்நலக் குறைவாலும் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பரவிய தகவல்களுக்கு அவரது குடும்பத்தினர் தற்போது முற்றிலுமாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கே.ராஜனின் மகன் சுரேஷ் ராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் தந்தை குடும்பத்துடன் எப்போதும் தொடர்பில் தான் இருந்தார்; எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அவர் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினை தான் காரணம் எனத் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். உண்மை என்னவென்றால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கு எனது தந்தை சுமார் 20 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்திருந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் அவர் கடும் அவதிப்பட்டு வந்தார். கடனைத் திரும்பக் கேட்டு அவர் பலமுறை போன் செய்தும், கடன் வாங்கியவர்கள் அவரது போனை கூட எடுக்காமல் ஏமாற்றித் தவிர்த்துள்ளனர். இதனை நானே நேரில் பார்த்திருக்கிறேன்” என்று வேதனையோடு குறிப்பிட்டார்.
மேலும், “பணம் வராத கவலையாலேயே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கூட பொருத்தப்பட்டது. அந்த நிலையிலும், தன்னை ஏமாற்றியவர்களை நினைத்து அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். என் தந்தை யார் யாருக்குக் கடன் கொடுத்தார் என்பதற்கான அனைத்து ஆவணங்களும், அவர்கள் கொடுத்த காசோலைகளும் (Cheques) எங்களிடம் பத்திரமாக உள்ளன. அவற்றைச் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திடம் முறைப்படி ஒப்படைத்து, என் தந்தைக்கு வர வேண்டிய பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம். அவரை ஏமாற்றியவர்கள் யார் என்ற விபரங்களை இப்போதைக்கு வெளியில் சொல்ல விரும்பவில்லை” என்று சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார். கடனைத் திருப்பித் தராமல் ஒரு மூத்த தயாரிப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தச் சினிமா பிரபலங்கள் யார் என்ற விபரம் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் செல்லவுள்ளதால், கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
#KRajanDemise #SureshRajanInterview #KRajanSuicideReason #BreakingNews #May18 #TamilCinemaShock #KollywoodDebts #ProducerKRajan #FinancialCrisis #CinemaProducersAssociation #ChequeBounceIssues #MentalAgony #ChennaiNews #AdyarRiverTragedy #InvestigateKRajanDeath #TamilNews #ThalapathyVijay #TVK_Government #CM_Vijay_Official_“`