திருப்பத்தூர்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தான் மாறிவிட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். “நாங்கள் இப்போதும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில்தான் செயல்படுகிறோம்” என அவர் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழு முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதில் கே.சி. வீரமணியும் இடம்பெற்றிருந்ததால், அவரது திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அண்மையில் பறித்தார். இந்நிலையில், வாணியம்பாடியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீரமணி, தொகுதி வளர்ச்சிக்காகவே தவெக அரசை ஆதரித்ததாகவும், எதிர்காலத்தில் எடப்பாடியே பொதுச்செயலாளர் என்றும் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு அவர் மீண்டும் எடப்பாடி அணிக்குத் தாவுகிறார் என்ற வதந்த கிளப்பியது.
இது குறித்து தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள கே.சி. வீரமணி, “சபாநாயகரிடம் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொடுத்த கடிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில ஊடகங்கள் செய்தியைத் தவறாகப் பரப்புகின்றன. கட்சியைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான் என்றாலும், எங்களது செயல்பாடுகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில்தான் தொடர்கிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அதிமுக கோஷ்டி பூசலில் கே.சி. வீரமணி வேலுமணி பக்கமே உறுதியாக நிற்பது உறுதியாகியுள்ளது.
#KCVeeramani #ADMK_Crisis #SPVelumani #CVShanmugam #EPS #BreakingNews #May16 #TamilNaduPolitics #AiadmkSplit #PoliticalRumours #Clarity #Jolarpettai #ThalapathyVijay #TVK_Support #TNAssembly #PartyPolitics #TamilNews #PoliticalUturn #ADMK_Update #CM_Vijay_Official_“`