வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்கள் முற்றாகச் சேதமடைந்து, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தற்போது அறுவடைக் காலம் என்பதால், இந்த அழிவின் காரணமாகத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் பல்வேறு துணைத் தொழில்களும் இதனால் நலிவடைந்து வருகின்றன.

நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள மரக்கறித் தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் மலைநாட்டு மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

தொடர் மழையினால் தாழ்வான விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்குத் தயாராக இருந்த மரக்கறிகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன அல்லது மண்ணில் புதைந்து போயுள்ளன. அத்துடன், வெள்ள நீர் காரணமாகப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள் அதிகரித்து, மரக்கறிகளைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விளைச்சலைக் குறைத்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப்பெருக்கின் போது ஆற்று மணலும் சேறும் கலந்த மழைநீர் விவசாய நிலங்களில் பாய்ந்துள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரும், மணலும் சேறும் நிலத்தில் அப்படியே தங்கிவிடுவதால், விவசாய நிலங்களின் தன்மை மாறி, அவை பயிர்செய்ய முடியாத தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. அத்துடன் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, மண் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கந்தப்பளை போன்ற பகுதிகளில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மழைநீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமை, நீர்ப்பரப்புப் பகுதிகளில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆறுகளைச் சரிவர ஆழப்படுத்தாமை ஆகியவையே இதற்குக் காரணம் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றின் காரணமாக நீர்நிலைகளின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்கள் அழிவடைவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நஷ்டஈடுகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக