வத்திராயன் பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை-செய்தி சேகரித்த ஊடகவியலாள ருக்கும் அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம்.

டித்வா புயல் இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது வீடுகளும் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது. உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கி இருந்தோம்.

எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர் இதுவரை வந்து பார்க்கவில்லை.சேத விபரங்களை அறிக்கையிடவில்லை.நிரந்தர வீடு என்று கூறிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அடிக்கடி கூறி வருகிறார் ஆனால் உண்மையில் பாதிப்படைந்த மக்களை அந்த நிவாரணம் போய் சேருவதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்

பாதிக்கப்படாத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை

கிராம அலுவலர் கூட இதுவரை பார்க்கவில்லை.காலில் காயமுற்று நடக்க முடியாதவர்களாக துன்பப்படுகின்றோம். அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றார்கள்

எந்த வீடாக இருந்தாலும் சரி புயலால் சேதமடைந்த வீட்டை வந்து கிராம அலுவலர் பார்வையிட வேண்டுமல்லவா? அதனையும் வந்து பார்வையிடவில்லை அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள் ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டில் கஷ்டப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும் தரப்படவில்லை.வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீட்டில் குடியிருக்கும் எங்களை யாரும் வந்து நலம் விசாரிப்பதாக இல்லை.ஒரு சிலரின் தூண்டுதலில் நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றோம்.

ஒரு சில கிராமத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய் சேர்ந்ததா என்பதை ஆராய ஜனாதிபதி அவர்கள் சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

காலா காலம் நாம் வீடு இன்றி தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம் அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் கொடுப்பதற்கு மனம் இல்லாமல் இருக்கிறார்கள்

ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி பதிக்கப்பட்ட எங்களுக்கு கொடுப்பவை பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,