ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்

ழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.

மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது. அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை.

அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.

உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.

சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம்.

இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency

4

கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

July 30, 2026

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை

default (41)

ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் மாயமான பெண், காணாமல் போவதற்கு முன் தனது சகோதரியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்: குடும்பத்தினர் தகவல்

July 30, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) நடைபெற்ற ‘ஷம்பாலா’ இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண், தான் மாயமாவதற்கு

default (40)

கிச்சனர் (Kitchener) வீட்டில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம்: கொலை முயற்சி வழக்குப் பதிவு

July 30, 2026

கத்திக்குத்துச் சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து, கிச்சனர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர், 28 வயதான

3

பாலைவனமாக மாறி வறண்டு கிடக்கும் காவிரி ஆறு: திருச்சியில் அதிர்ச்சி தரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!

July 30, 2026

திருச்சி: நடப்பாண்டில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் திருச்சியில் காவிரி ஆறு முற்றிலும் நீரின்றி

gotta

கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட

Dollar-Rupee

வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

July 30, 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க

he

SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம்

July 30, 2026

ரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை,

jud

பெல்லன்வில படுகொலை; இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் விளக்கமறியலில்

July 30, 2026

ன நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்காக மேல் மாகாண

padd

பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

July 30, 2026

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

w

அவசர சிவப்பு எச்சரிக்கை

July 30, 2026

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக