ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

மனுதாரரான தம்சித் ஜயரத்ன, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவராக இருந்தபோது, அவரது தந்தை க்ரூப் கெப்டன் சரோஜ் ஜயரத்ன ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டதையடுத்து, குடும்பத்துடன் அவரும் மொஸ்கோ சென்றார்.

மொஸ்கோவில் உள்ள இந்தியப் பாடசாலையில் கல்வி பயின்ற தம்சித் ஜயரத்ன, அங்கு உயர்தரப் பரீட்சைக்கு இணையான தகுதியைப் பூர்த்தி செய்து 4 ‘A’ தரங்களைப் பெற்றார்.

வெளிநாடுகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கல்வி பயிலும் மாணவர்கள், வெளிநாட்டு உயர்தரத் தகுதிக்கு இணையான தகுதியுடன் கட்டணம் செலுத்தி இலங்கை பல்கலைக்கழகங்களில் சேர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்கிறது.

இந்தநிலையில், தூதரக சேவையில் உள்ளவர்களின் பிள்ளைகள், இரண்டு ஆண்டுகளுக்குள் சேவை அவசியம் காரணமாக இலங்கைக்குத் திரும்ப அழைக்கப்பட்டாலும், இந்த வகையின் கீழ் பல்கலைக்கழகத்தில் நுழைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிவிலக்கு அளித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மனுதாரரின் தந்தையின் ஆரம்ப நியமனம் இரண்டு ஆண்டுகளுக்கானது என்பதாலும், அந்தக் காலப்பகுதியில் அவர் திரும்ப அழைக்கப்படாததாலும், உயர் தரத்துக்கு இணையான பரீட்சையை அவர் அங்கு நிறைவு செய்ததாலும், தூதரக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்தக் காரணத்தைக் காட்டி, தூதரக ஊழியர்களின் பிள்ளைகளுக்குரிய திட்டத்தின் கீழ் தம்சித்தின் விண்ணப்பத்தை ஆணைக்குழு நிராகரித்துவிட்டது.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் திகதியன்று இது தொடர்பான மனு விசாரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

arr

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைத் தாக்கியவர் கைது

December 15, 2025

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர்

Baby death

பீப்பாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

December 15, 2025

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக

bre

பிரேசிலில் முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

December 15, 2025

முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில்

mora

மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

December 15, 2025

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின்

rob

ஹாலிவுட் இயக்குநரும் அவரது மனைவியும் கொலை!

December 15, 2025

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில்

thai

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் துப்பாக்கி சூடு

December 15, 2025

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே

den

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்

December 15, 2025

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் எவராக

neth

மண்சரிவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

December 15, 2025

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மதியம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவ, தென்னவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்

mu

மியூனிச் – மைன்ஸ் போட்டி சமநிலை!

December 15, 2025

ஜேர்மனிய தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மைன்ஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

gell

நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது!

December 15, 2025

மேற்கத்தேய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ma

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

December 15, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக

ju2

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

December 15, 2025

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல்