யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன் மருந்து களஞ்சியசாலை அமைக்கப்படும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். அத்தகைய முறையற்ற செய்திகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது:

கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் நடந்த அனர்த்தம் (தீ விபத்து) தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இரண்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன:

முதலாவது குழு வைத்தியசாலைக்கு வெளியே உள்ள அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டு, அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது குழு வைத்தியசாலை மட்டத்தில் அமைக்கப்பட்டு, தீயில் இருந்து மீட்கப்பட்ட மருந்துகளின் இருப்பை எடுக்கும் பணியை மேற்கொள்கிறது. தீயில் எரிந்த மருந்துகளின் மதிப்பு மற்றும் களஞ்சியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அனர்த்தம் நடந்த இடம் யாழ்ப்பாணம் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளது. தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை கொழும்பிலிருந்து வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளில் இணைந்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடைந்ததும் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்படும் என்றும், நிரந்தர மருந்து களஞ்சியசாலையை நவீன வசதிகளுடன் அமைத்துத் தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது வைத்தியசாலையில் சேவைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால் மருத்துவ சேவைகளில் குறைபாடு உள்ளதாகவும் மருந்துகள் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் வைத்தியசாலை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். எனவே மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி