முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை – அருண ஜயசேகர

முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது.

முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது நிலங்களுக்குத் திரும்ப முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை.

மன்னார் மாவட்டம், மரிச்சிக்கட்டி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 245.9 ஹெக்டேயர் நிலம், 2009ஆம் ஆண்டு முதல் கடற்படை முகாமுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்படை பல முறை அந்த நிலத்தின் பகுதிகளை விடுவித்துள்ளது. மிகச் சமீபத்திய காணி விடுவிப்பு 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது சுமார் 77 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டது. கடற்படை பயன்படுத்தும் நிலத்தில் அமைந்துள்ள 27 பொதுமக்கள் வீடுகளுக்காக 2012ஆம் ஆண்டில், மணல்காடு கிராமத்தில் 27 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கடற்படை தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு முறையான வீட்டு வசதிகள் வாழ்வாதார வாய்ப்புக்கள் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த மக்களுக்கு அரசாங்கம் இதுவரை என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் தகவல் ஏதும் இல்லை.

மேலும் கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்திற்குள் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயமும், ஒரு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்புப் பாடசாலையும் அமைந்துள்ளன. அப்பகுதியை கடற்படை 77 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளதோடு அந்த இடங்களுக்கு வருவதற்கு நுழைவுப் பாதை கடற்படை விடுவித்துள்ளதோடு கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கலப்புப் பாடசாலையின் செயல்பாடுகளை எளிதாக்கும் பொருட்டு சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கத் தமிழ் கலப்புப் பள்ளிக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கடற்படை வழங்குகிறது. இலவசப் பாடசாலை போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடற்படையால் சம்பள அடிப்படையில் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் கடற்படை வெளியேற்றவோ அல்லது எந்தவொரு பொதுமக்களையும் இடம்பெயரச் செய்யவோ இல்லை. மொத்தமாக சுமார் 829 ஏக்கர் நிலப்பரப்பு, பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்