முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் உள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமையுங்கள்!

முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் பாதுகாப்பற்ற கட்டடங்களால் பாடாசாலை மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் முல்லை வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது எச்சரித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,

நான் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று, பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்.

அந்த வகையில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான கட்டடம் இருக்கின்றது.

அந்தக் கட்டடம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அல்லது குறித்த கட்டடம் உரிய தொழில்நுட்பவியலாளர்களால் பார்வையிடப்பட்டு உரிய சீரமைப்பு வேலைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அங்கு கூடுதலான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் இந்த பழைய கட்டடங்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படாவிடின் அந்தக் கட்டடங்களால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறான பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களால் அங்கு கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பாகும்.

எனவே அந்த பழைய கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது அந்தக் கட்டடங்களைச் சீரமைத்துக் கொடுக்கப்படுமா? இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்பதை அறிய விரும்புகின்றேன் என்றார் ரவிகரன்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறித்த விடயத்தினை தாம் முல்லை வலயக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்துவதாக, வலயக் கல்விப் பணிமனை சார்பாக குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதியால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தி, பழைய ஆபத்தான பாடசாலைக் கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்கவோ அல்லது சீரமைக்கவோ உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ரவிகரன் கூறினார்.

அத்தோடு பாடசாலைகளில் இவ்வாறான ஆபத்தான பழைய கட்டடங்கள் இருந்தால் அவை தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தம்மிடம் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை உரிய தரப்பினருக்கு அனுப்புவதுடன், அந்தக் கோரிக்கைக் கடிதங்களின் பிரதிகளைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்ட ரவிகரன், தம்மாலும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அழுத்தம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்