மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும் நாடகம்?

ட்டின் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 18 வீதத்தால் அதிகரித்துள்ள தீர்மானமானது, நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாடகமென மின்சாரப் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல குற்றம் சாட்டியுள்ளார்.

மின்சார நுகர்வோர் சங்கத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடாக மின்சாரப் பாவனையாளர்களுக்கு, குறிப்பாக 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பாரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் உயர்த்தியுள்ளனர். இதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைக்கும் காரணங்கள் மிகவும் விந்தையானவை.

காலநிலை மாற்றம் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், அதிகரித்த வெப்பம் காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

தற்போது மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதற்கு உண்மையான காரணம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையாகும். இதனால் மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக இயங்கவில்லை. அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே அதிக விலைக்கு அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நீர் மின் உற்பத்தி குறையும் போது, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாகவே அந்த இடைவெளி நிரப்பப்பட்டது. ஆனால் இன்று நிலக்கரி மின் உற்பத்தி நிலையமே நாட்டில் இல்லை என்ற ரீதியில் தலைவர் பேசுகிறார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பல பில்லியன் கணக்கான ஊழல்களை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களின் பக்கம் நிற்காமல், ஊழல்வாதிகளின் பக்கமே நிற்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத்த தவணைக்கான கடனைப் பெற்றுக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் திடீர் கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளது. இதற்காக நாட்டு மக்களைப் பட்டினி போடச் சொன்னாலும் இந்த அரசாங்கம் அதைச் செய்யும். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக டீசல் பீப்பாய் ஒன்றினை 286 டொலர்களுக்குக் கொள்வனவு செய்த பெருமையும் இவர்களையே சாரும். இவ்வளவு அதிக விலைக்கு எரிபொருளைக் கொண்டு வந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தால் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த நஷ்டத்தைத் தற்காலிகத் தரவுகளைக் காட்டி அப்பாவி மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தக் கட்டண உயர்வு சாதாரண மக்களை மாத்திரமன்றி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சியாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும். 186 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சிறிய கடைகள் முதல் தொழிற்சாலைகள் வரை உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதன் விளைவாகப் பொருட்களின் விலைகள் உயரும், இறுதியில் அந்தப் சுமையையும் நுகர்வோரே சுமக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கு முன்னதாக மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கட்டணத்தை பல மடங்காக அதிகரித்துள்ளனர். ஜனாதிபதியின் வாக்குறுதிகள் இன்று வெற்றுப் பேச்சுகளாக மாறியுள்ளன.

கடந்த முறை மின்கட்டணத்தை உயர்த்தும் போது, இலங்கை மின்சார சபையின் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு ஊதியம் வழங்கப்படுமெனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

அவர்கள் தங்களின் உழைப்பிற்கான பலனைப் பெற முடியாமல் இன்றும் தவிக்கின்றனர். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கண்களைக் கட்டிக்கொண்டு அரசாங்கத்தின் தேவையை மாத்திரமே நிறைவேற்றுகிறது. இந்தத் தன்னிச்சையான மின்சாரக் கட்டண உயர்வை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த முறையற்ற தீர்மானங்களால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி முற்றாக அழிந்து, அனைத்துப் பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்கு நாடு தள்ளப்படும் என்றார்.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி