மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை நேற்றைய தினம் நடத்தியது.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர்.

GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளின் ஆதரவுடன், திறன் மற்றும் கெளரவமான பணிக்கான வழிகளை வலுப்படுத்த நிறுவனங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த தொடக்க விழாவில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் .நாலக்க கலுவெவ, “இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அவசியமானவை. ஏனெனில், இலங்கையின் மிக நீடித்த தொழிலாளர் சந்தை இடைவெளிகளில் ஒன்றை இவை நிவர்த்தி செய்கின்றன. பல மாற்றுத்திறனாளிகள் பயிற்சியை முடிக்கின்றனர். ஆனால் அவர்களின் வேலைவாய்ப்புக்கான பாதை அணுகல் சிக்கல்கள் மற்றும் முதலாளி வெளிப்பாடு இல்லாததால் தடுக்கப்படுகிறது. இன்றைய தளம் திறன்களுக்கும் உண்மையான வேலைகளுக்கும் இடையே நேரடி இணைப்பை உருவாக்குகிறது.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு, வேலைவாய்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளள் தங்களது சுயவிவரக் கோவையை (CV) சமர்ப்பித்தனர். மேலும், விருந்தோம்பல் தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை, சில்லறை வணிகம், உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியவற்றிலிருந்தும் நிறுவனங்களின் வேலைதாரர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் ஒரு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டிருந்தது.

அது மாற்றுத்திறனாளிகள் நடத்தும் வருமானம் ஈட்டும் திட்டங்களை முன்னிலைப்படுத்தியது. பல்வேறு பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் சூழலியல் ரீதியாகப் பாதிப்பற்ற பொருட்கள் ஆகியவற்றை அங்கு காட்சிப்படுத்தினர். சித்திரா லேன் சிறப்பு குழந்தைகள் பாடசாலை (Chitra Lane School for Special Children) ஏற்பாடு செய்த ஒரு படைப்பு வலயம் (Creative Zone) குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைப்படைப்புகளை முன்வைத்தது.
நிகழ்வு முழுவதும், முதலாளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பணியிட அணுகல் மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய நியமன வழிகளை விரிவாக்குவது குறித்து விவாதித்தன. நிறுவுனர்கள் குறிப்பிட்டதாவது: மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு அணுகலில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இன்னும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் நிலவுகின்றன.

இந்த நிகழ்வை, ஜெர்மன் கூட்டாட்சி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைச்சின் (BMZ) சார்பாக, Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) நிறுவனம், சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (SDC) ஆதரவுடன் செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

By C.G.Prashanthan

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை