மத்திய கிழக்கில் மீண்டும் போர் சூழல் உருவாகும் அபாயம் – சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கை

ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவு காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் போர் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

அமெரிக்கா தரப்பில், “ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டுக்கு மாற்ற ஒப்புக்கொண்டால் மட்டுமே பதற்றம் குறையும்” என்ற நிபந்தனை வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்று மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அமெரிக்கா மட்டுமின்றி, பேச்சுவார்த்தையில் நடுவராக செயல்பட்டு வந்த பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் தரப்பும் ஈரானின் அணு திட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமைதி ஒப்பந்தம் வேண்டுமெனில் ஈரான் தனது உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும்” என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், “ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாது” என்ற ஈரானின் புதிய நிலைப்பாடு, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் தாக்கம் உலக சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டொலரை தாண்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் கூறுகையில், பாகிஸ்தான் நடத்திய பல சுற்று அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவின் சமீபத்திய திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தரப்பில், ஈரானை கடுமையான ஒப்பந்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இல்லையெனில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வாய்ப்பும் இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்