மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன் விக்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் தம்பதியினரின் மகனான இவர், தனது மூன்று வயதிலேயே தாயின் வழிகாட்டலில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றலை பெற்றுள்ளார். ரயனின் அசுர வேக எழுத்தாற்றலை கவனித்த அவரது பெற்றோர், இதனை உலக சாதனையாக பதிவு செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள திரு இருதயநாதர் மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மேற்பார்வையில் இதற்கான சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவ வரதகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடுவர்களாக கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியின் போது, 3 மற்றும் 4 எழுத்துகளைக் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை வெறும் 8 நிமிடங்களில் எழுதி அப்டியல் ரயன் விக்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்த நடுவர் குழு, புதிய உலக சாதனையாக அங்கீகரித்தது.

சாதனை படைத்த சிறுவனுக்குச் சான்றிதழ், நினைவு கேடயம், பதக்கம் மற்றும் அடையாளச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஏ. யூலியன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்திச் சிறப்புரையாற்றினர்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக புதுவையூர் பு. தியாகதாஸ், ‘சின்னஞ்சிறு கல்விமான்கள்’ பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை ஜெ.எம். வலயட் மற்றும் ‘Jez Reel Kids Garden International College’ நிர்வாகப் பணிப்பாளர் பி.என். ஸ்டான்லி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

ve

கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

March 10, 2026

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண

kur

மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

March 10, 2026

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ding

உப்பாறு பகுதியில் 18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

March 10, 2026

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக

yo

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷிதவுக்கு அதி குற்றப்பத்திரிகை

March 10, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம்

sara

யாழ்.சரவணையில் ஆலயச் சிலை உடைப்பு

March 10, 2026

யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத்

au

ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸி.பொலிஸார் உதவி

March 10, 2026

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு

g

கற்பிட்டியில் கடல் அட்டைகளுடன் ஏழு பேர் கைது

March 10, 2026

கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக

chi

மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

March 10, 2026

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன்

ind

மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? – சுப்ரமணியன் சுவாமி

March 10, 2026

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள

ko

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு!

March 10, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம்

p

பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு, வீட்டிலிருந்தே வேலை

March 10, 2026

ரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ்

5

துப்பாக்கிச் சூடு; மற்றுமொரு சந்தேகநபர் கைது

March 10, 2026

கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி