சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். தனது உரையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்ததற்குத் தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். தான் ஷூட்டிங்கிலிருந்து வந்து முதலமைச்சரானதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ‘இமேஜ்’ விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அது வெறும் ரீல் என்றும், மக்களின் இதயங்களில் இடம் பிடித்ததாலேயே தான் ரியலாக முதலமைச்சரானேன் என்றும் கூறினார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வேதனையைச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் இவ்வளவு கொடூரமாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தான் தொடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேர்மையாக இருக்க நினைப்பவர்களே கூட்டணி ஆட்சியைத் தருவார்கள் என்றும், ஊழலில் ஊறிப்போனவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் திமுக-வைச் சாடினார். எதிர்க்கட்சிகளின் ‘சோபா மாடல் அரசு’ என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், 50 ஆண்டுகளாக இதே டெக்னிக்கைத் தான் இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது என்றும் நையாண்டியாகக் கூறினார். காவல் துறையை கையில் வைத்திருந்தவர்கள் போதைப்பொருட்களை ஏன் ஒழிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் விஜய், தங்களின் அரசு சட்ட ஒழுங்கைக் காப்பதில் உறுதியாக இருக்கும் என்று உறுதியளித்தார். முதல்வரின் இந்தப் பேச்சின்போது திமுக-வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
#CMVijay #Vijay #TVK #Assembly #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #VijaySpeech #TamilNaduPolitics #CorruptionFree #VijayVsDMK #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #OppositionWalkout #PoliticalAnalysis #PublicRepresentation #AdministrativeResponse #Vijayism #Justice #PublicAccountability