ஒன்டாரியோ அரசு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற நீர்வழங்கல் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் சுமார் $29 மில்லியன் முதலீடு செய்கிறது. இந்த நிதி, மியூனிசிபல் ஹவுசிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புரோகிராம் (Municipal Housing Infrastructure Program) இன் ஹெல்த் அண்ட் சேப்டி வாட்டர் ஸ்ட்ரீம் (MHIP-HSWS) கீழ் வழங்கப்படும் மொத்த $875 மில்லியன் முதலீட்டின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாக்கப்படுவதுடன், புதிய வீட்டு வசதிகள் உருவாக, தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் இருக்க, மற்றும் தென்மேற்கு ஒன்டாரியோவில் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்திருக்கின்றார்.
“ஒன்டாரியோ முழுவதும், நாங்கள் $223 பில்லியன் மதிப்பிலான கட்டுமானத் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறோம். இதன் மூலம் ஒன்டாரியோவை பாதுகாக்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யவும், குடும்பங்கள் நம்பும் உயர்தர சேவைகளுடன் இணைக்கவும் செய்கிறோம்,” என்று முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார். “இன்றைய இந்த முதலீடு, வீட்டு உரிமையாளர்களை பாதுகாப்பதோடு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் கவுண்டிகளில் புதிய வீடுகள் கட்டப்படுவதற்கும் ஆதரவாக இருக்கும். எதிர்காலத்திற்காக கட்டிடும் பணிகளில் எங்கள் உள்ளூர் நிர்வாகங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளாதார அநிச்சயத்தையும், தேவையற்ற அமெரிக்க வரிகளையும் சமாளிக்கும் இந்த நேரத்தில், வளர்ச்சியை ஊக்குவிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சமூகங்களை வலுப்படுத்தும் முக்கிய உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்து ஒன்டாரியோவை பாதுகாக்கிறோம்,” என்று இடைக்கால உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ள டாட் மெக்கார்த்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.