தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிஇ பெய்ரூட்டில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள்இ வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்ட உணவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் காட்சிகளை அசோசியேட்டட் பிரஸ் புகைப்படங்கள் காண்பித்துள்ளன
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளுக்கு அஞ்சி வெளியேறிய குடும்பங்கள் பெய்ரூட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு அருகே நின்று கொண்டுஇ தங்களுக்கு வழங்கப்படவுள்ள உணவைப் பெறுவதற்காகக் கைகளை நீட்டியபடி காத்திருக்கின்றனர்.
லெபனானில் போர் தொடங்கியதிலிருந்து நாடு தழுவிய ரீதியில் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களைப் புதன்கிழமை அன்று லெபனான் எதிர்கொண்டது. தலைநகர் பெய்ரூட்டிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன் புகை மண்டலமும் காணப்பட்டது. தஞ்சம் அடைவதற்குப் பாதுகாப்பான இடமே இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளையே தாம் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இந்த மோதல் தொடங்கியதிலிருந்து லெபனானில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வியாழக்கிழமை வரை லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி குறைந்தது 1888 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 6092 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த வாரம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த முரண்பட்ட கருத்துக்கள் இன்னும் ஒரு முக்கிய சிக்கலாக நீடிக்கிறது.
இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.